தமிழகத்தில் இன்று
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முக்கிய பொறுப்புக்களில் இந்தியர்கள்
டெல்லி:
அமெரிக்காவில் ரெட்மாண்ட் நகரில் உள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமையகத்தில் முக்கிய பொறுப்புகளில் 3 இந்தியர்கள்நியமிக்கப்பட்டுள்ளனர்.
உலகின் மிகப் பெரிய பணக்காரரான பில் கேட்ஸின் இந்த மைக்ரோசாப்ட் நிறுவனம் உலகின் சிறந்த கம்ப்யூட்டர் சாப்ட்வேர் தயாரிப்பு நிறுவனமாகஉள்ளது. இந் நிறுவனத்தில் பல இந்தியர்கள் பணியாற்றினாலும், முக்கிய பொறுப்புகளில் இந்தியர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை.
இப்போது மேலாளர்கள் நிலையில் மூன்று முக்கிய பொறுப்புகளில் இந்தியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தொழில் மேம்பாட்டுப் பிரிவு துணைத் தலைவராகசஞ்சய் பார்த்தசாரதி, விண்டோஸ் இன்ஜினியரிங் சர்வீஸஸ் குரூப்ஸ் துணைத் தலைவராக சோமசேகர், மார்க்கெட் வாய்ப்புகள் மற்றும் தொழில் ஒப்பந்தப் பிரிவுதுணைத் தலைவராக அமர் நேரு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நிறுவனத்தின் ஒவ்வொரு பிரிவிலும் உள்ள நிர்வாகக் குழுக்களை வலுப்படுத்தும் திட்டத்தின் கீழ் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகமைக்ரோசாப்ட் கார்ப்பொரேஷன் நிறுவனம் அறிவித்துள்ளது.
தொழில்நுட்பத் துறையில் இந்தியர்கள் சிறந்தவர்கள் என்பதை உலக நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன. தற்போது உலகில் சிறந்த கம்ப்யூட்டர்சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முக்கிய பொறுப்புகளில் இந்தியர்கள் நியமிக்கப்பட்டுள்ளது இந்தியர்களுக்கு கிடைத்த மற்றொருபெருமை என்றார் மைக்ரோசாப்ட் கார்ப்பொரேஷன் இந்தியா லிமிடெட்டின் தலைவர் ராஜீவ் நாயர் தெரிவித்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications