For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நெடுமாறன் 15-ல் போராட்டம்
சென்னை:
தமிழகம் முழுவதும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக 15-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழ் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன்தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் திங்கள் கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழ் ஈழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்பு குழு சார்பில் வருகிற15-ம் தேதி தமிழகம் முழுவதிலும் கண்டன ஆர்ப்பாட்டங்களும், கூட்டங்களும்நடைபெறும். சென்னை மற்றும் மாவட்ட தலைநகரங்களிலும் இது நடைபெறும்.
தமிழ் ஈழ விடுதலை போராட்டத்தை மத்திய அரசு அங்கீகரிக்க வேண்டும். எழுத்துரிமையை பறிக்கக் கூடாது என்ற இரு கோரிக்கைகளையும்வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் மற்றும் கூட்டங்கள் நடைபெறும் என்று நெடுமாறன் கூறியுள்ளார்.
Comments
Story first published: Wednesday, May 31, 2000, 5:30 [IST]