தமிழகத்தில் இன்று
ரூ. 500 கோடி கடத்தல் டிம்பர் மரங்கள் பறிமுதல்
கோயம்புத்தூர்:
பல்வேறு மாநிலங்களிலிருந்து சட்டவிரோதமாக கடத்தப்பட்ட ரூ. 500 கோடி பெறுமானமுள்ள டிம்பர் மரங்களை வன இலாகா அதிகாரிகள் பறிமுதல்செய்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன இலாகா அமைச்சர் டி.ஆர்.பாலு நிருபர்களிடம் கூறினார்.
கோயம்புத்தூரில் நடந்த தமிழக வனத் துறையின் நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையில், அருணாச்சலப் பிரதேசம், அசாம் ஆகிய மாநிலங்களிலிருந்துஅனுமதியில்லாமல் மரங்கள் பிற மாநிலங்களுக்குக் கடத்தப்படுவதாகத் தகவல்கள் கிடைத்தது. இதையடுத்துப் வன அதிகாரியினர் ரயில்வே நிலையங்களில்சோதனையைத் தீவிரப்படுத்தினர்.
சோதனையில், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள ரயில்நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் பெறுமானமுள்ள மரங்களைப் போலீசார்கண்டுபிடித்தனர். இவை அனைத்தும் கடந்த எட்டு மாதங்களாக நடந்த சோதனையில் கிடைத்தன. குற்றவாளிகளைப் பிடிக்கும் முயற்சியில் போலீசார்ஈடுபட்டுள்ளனர் என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications