தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil
அமைச்சரைக் கொன்ற மனித வெடிகுண்டு யார்?

கொழும்பு:

கொழும்பில் 7-ம் தேதி அமைச்சர் குணரத்தினேயைக் கொன்ற மனித வெடிகுண்டு யார் என்று அடையாளம் தெரிந்துள்ளது.

அமைச்சர் குணரத்தினே, அவரது மனைவி சியாமா உள்பட 25 பேர் 7-ம் தேதி கொழும்பு புறநகர், மொரட்டுவா சந்திப்பில் நடந்த மனிதவெடிகுண்டுவெடிப்பில் கொல்லப்பட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக இலங்கைப் போலீஸார் நூற்றுக்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மனிதவெடிகுண்டாக வந்தவர் யார் என்ற அடையாளம் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக ஒரு பெண் உள்பட மூன்று பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மனித வெடிகுண்டாக வந்த நபரின் பெயர் ரூபன் எனத் தெரிய வந்துள்ளது. அவரது சட்டைப் பாக்கெட்டில் இந்தத் தகவல்கள் இருந்தன. இதை வைத்தேமற்ற மூவரும் கைது செய்யப்பட்டனர். ரூபன் கொழும்பில் தங்கியிருக்க வீடும், கொலை நடந்த இடத்திற்குச் செல்ல வேனும் கொடுத்து இவர்கள்உதவியுள்ளனர்.

மனித வெடிகுண்டாக வந்த நபர் சி-4 ரக பிளாஸ்டிக் வெடிகுண்டைப் பயன்படுத்தியுள்ளார். இது மிகவும் சக்தி வாய்ந்தது. இதற்கு முன்பு விடுதலைப்புலிகள்இதுபோன்ற மனித வெடிகுண்டுகளில், சாதாரண வகை வெடிகுண்டுகளையேப் பயன்படுத்தினர். இப்போதுதான் அதிக சக்தி வாய்ந்த வெடிகுண்டைப்பயன்படுத்தியுள்ளனர். இதன் காரணமாகவே, அமைச்சர் குணரத்தினேயைக் கொன்ற நபரின் உடல் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்து விட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+