தமிழகத்தில் இன்று
பிரச்-ச-னை-களை-யும் மீறி உல-கின் "மெ-கா" பணக்காரராய் தொட-ரும் பில் கேட்ஸ்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">நியூயார்க்:
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் பில் கேட்ஸ் தொடர்ந்து உலகிலேயே பெரும் பணக்காரராகத் திகழ்கிறார்.
நியூயார்க் நகரின் போர்ப்ஸ் வருடாந்திரப் புத்தகத்தில் இது கூறப்பட்டுள்ளது. உலகிலுள்ள 200 பணக்காரர்களின் பட்டியலை இந்தப் புத்தகம் வெளியிட்டுள்ளது.
ஆரக்கிள் கார்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் லேரி எல்லிசன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர்களில்ஒருவரான பால் ஆலன் மூன்றாவது பெரும் பணக்காரராக உள்ளார்.
கடந்த 12 மாதங்களில் பங்குகள் விலைச் சரிவால் பில் கேட்ஸுக்கு 40 பில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டது. இருந்தும் அவர் தொடர்ந்து முதலிடத்தில்உள்ளார்.
1999-ல் பில் கேட்ஸின் சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலராக இருந்தது. அதன் பிறகு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பங்குத் தொகை 45 சதவீதம்குறைந்தது.மைக்ரோசாப்ட் நிறுவனத்தைப் பிரிப்பது தொடர்பாக அரசு சார்பில் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள், நிறுவனம் பிரிக்கப்படுமாஎன்பதில் நிலவிய குழப்பங்கள் காரணமாக பங்கு மதிப்பு வீழ்ச்சியடைந்தது.
தற்போது பில் கேட்ஸுக்கு 60 பில்லியன் டாலர் சொத்து மட்டுமே உள்ளது.
ஆரக்கிள் நிறுவனம் கடந்த ஆண்டு 500 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது. எல்லிசனின் சொத்து மதிப்பு 47 மில்லியன் டாலராக உள்ளது.
200 பணக்காரர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 1.1 டிரில்லியன் டாலர்கள் ஆகும்.
முதல் பத்து இடத்தில் உள்ள பணக்காரர்கள் வருமாறு:
1.பில் கேட்ஸ், மைக்ரோ சாப்ட் (60 பில்லியன் டாலர்).
2.லேரி எல்லிசன், ஆரக்கிள் (47 பில்லியன் டாலர்).
3.பால் ஆலன், மைக்ரோசாப்ட்.
4.வாரன் பப்பட், பெர்க்ஷைர் ஹதாவே (28 பில்லியன் டாலர்).
5.தியோ, கார்ல் ஆல்பிரட் (20 பில்லியன் டாலர்).
6.செளதி இளவரசர் அல்வலீத் பின் டலால் அல்சாத் (20 பில்லியன் டாலர்).
7.ராப்சன் வால்டன் (20 பில்லியன் டாலர்).
8.மசயோஸி சான் (19.4 பில்லியன் டாலர்).
9.மைக்கேல் டல் (17.8 பில்லியன் டாலர்).
10.கென்னத் தாம்சன் (16.1 பில்லியன் டாலர்).
பிரேம்ஜிக்கு இடமில்லை:
இந்தியாவின் விப்ரோ நிறுவனத் தலைவர் ஆசிம் பிரேம்ஜி பணக்காரர்களின் பட்டியலில் முக்கிய இடத்தில் இல்லை. பிப்ரவரி 18-ம் தேதி அவரது சொத்துமதிப்பு 35 பில்லியன் டாலராக இருந்தது. ஆனால் இப்போது வெறும் 6.9 பில்லியன் டாலர் மட்டுமே அவரது சொத்து மதிப்பு.
ஜூலை 3-ம் தேதி வெளியிடப்பட்ட போர்ப்ஸ் புத்தகத்தில் இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
யு.என்.ஐ.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications