For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...

By Staff
Google Oneindia Tamil News

-ரா-ணு-வம் கை-து செய்-த 2 தமிழ் மாணவர்கள் விடுத-லை

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு"> கொழும்பு:

இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்ட செல்வநாயகபுரம் தமிழ் மஹா வித்யால பள்ளி மாணவர்கள்இருவரை, திரிகோணமலை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

திரிகோணமலை மாவட்டத்தில் உப்புவேலி என்ற இடத்தில் உள்ள இப் பள்ளியில் படித்து வந்த நாகலோஜன்,நாகராச கெங்கேஸ்வரன் ஆகிய இரு மாணவர்களை இலங்கை ராணுவம் ஜூன் 8-ம் தேதி கைது செய்தது. இருமாணவர்களும், திரிகோணமலை மாவட்டத்தில் உள்ள தமிழ் மாணவர்களிடையே ராணவத்துக்கு எதிரானகருத்துக்களைப் பரப்பியதாக இவர்களை ராணுவம் கைது செய்தது.

தமிழ் மாணவர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து திரிகோணமலை மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தமிழ்பள்ளிகளிலும் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணிப்பு செய்தனர். இதையடுத்து பள்ளிகளின் முதல்வர்கள்மற்றும் தலைமை ஆசிரியர்களிடம் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் குணசேன தேனபாபு பேச்சு நடத்தினார்.

மாவட்ட மாஜிஸ்திரேட் உத்தரவின் மூலம் மாணவர்களை விடுதலை செய்வதா தேனபாபு உறுதி அளித்தார். அதன்பேரில் தமிழ் பள்ளிகளில் ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து, திரிகோணமலை நீதிமன்றத்தில் இவ்வழக்கை போலீஸார் கொண்டு சென்றனர்.

வழக்கை விசாரித்த திரிகோணமலை தாற்காலிக மாஜிஸ்திரேட் எம்.கே. செல்வராஜா, இரு மாணவர்களையும்விடுதலை செய்தார். நாகலோஜனை வழக்கிலிருந்து முழுவதுமாக விடுதலை செய்த மாஜிஸ்திரேட், நாகராசகெங்கேஸ்வரனை ஜாமீனில் விடுதலை செய்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X