தமிழகத்தில் இன்று
மதமாற்றத்தைத் தடை செய்ய வேண்டும் என்கிறது வி.எச்.பி
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கோவை:
மதமாற்றத்தை தடை செய்ய நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வர வேண்டும் எனஅகில இந்திய விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தேசிய செயலாளர் மோகன் ஜோஷிகூறினார்.
கோவையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கிறிஸ்துவ சர்ச்சுகள் தாக்குதலுக்குள்ளாகி இருக்கின்றன.இது தொடர்பாக வாஜ்பாயைச் சந்தித்து முறையிட்ட கிறிஸ்துவர்கள், சங் பரிவார்அமைப்புகள் மீது குற்றம் சுமத்தியுள்ளனர். இந்தக் குற்றச்சாட்டு எந்த வகையிலும்ஆதாரமற்றவை. வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.
கிறிஸ்துவர்கள் நாடு ழுவதும் மதமாற்றம் செய்வதில் முனைப்புடன் செயல்பட்டுவருகின்றனர். எனவே மதமாற்றத்தைத் தடை செய்ய நாடாளுமன்றத்தில் மசோதாதாக்கல் செய்ய மத்திய அரசு முன் வர வேண்டும்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. தற்போதுசிற்ப வேலைகள் முழு வீச்சில் நடைபெறுகிறது. இந்தக் கோயில் கட்டும் பணி இன்னும்ஓரிரு ஆண்டுகளில் முடிந்து விடும்.
இலங்கைப் பிரச்னையில் பல்வேறு கருத்துக்களைக் கூறுவதினால் தீர்வு ஏற்பட்டுவிடாது. ஐக்கிய நாடுகள் சபையில் அடுத்த மாதம் நடக்கும் அமைதிப்பேச்சுவார்த்தைக் கூட்டத்தில் இலங்கைப் பிரச்னை குறித்து இந்தியப் பிரதிநிதிகள் பேசவேண்டும் என்றார் அவர்.