Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...

Subscribe to Oneindia Tamil

"பாத்திமாவின் மூன்றாவது ரகசியம்": விரை-வில் வெளியிட வாடிகன் முடிவு

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">வாடிகன் சிட்டி:

போப் ஜான் பாலைக் கொல்ல முயற்சி நடக்கும் என்று கணிக்கப்பட்ட தகவல் அடங்கிய "பாத்திமாவின் மூன்றாவது ரகசியத்தை பகிரங்கப்படுத்தகத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமையகமான வாட்டிகன் சிட்டி முடிவு செய்துள்ளது.

ஜூன் 26-ம் தேதி இந்த ரகசியம் வெளியிடப்படவுள்ளது. இந்த ரகசியத்தில், போப் ஜான் பாலைக் கொல்ல முயற்சி நடக்கும் என்பது உள்ளிட்ட பலகணிப்புகள் இடம் பெற்றுள்ளன. போர்ச்சுக்கீசிய மொழியில் எழுதப்பட்டுள்ள இந்த ரகசியம் குறித்து மூத்த கார்டினால் ஜோசப் ரட்ஸிங்கர் விளக்கம்கொடுத்துள்ளார். ஜூன் 26-ம் தேதி இந்த ரகசியம் வெளியிடப்படுகிறது.

1981-ம் ஆண்டு மே 13-ம் தேதி போப் ஜான்பாலைக் கொல்ல முயற்சி நடக்கும், 20-வது நூற்றாண்டின் இறுதியில் கம்யூனிசம் அழியும் என்பதுபோன்ற கணிப்புகள் இந்த ரகசியத்தில் இடம்பெற்றுள்ளன. கணிப்பில் கூறியிருந்தபடியே, போர்ச்சுக்கீசிய நகரான பாத்திமாவில் போப் ஜான்பாலைக்கொல்ல முயற்சி நடந்தது.

இதையடுத்து இந்த கணிப்பு குறித்து உலகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இதை வைத்து பல ஊகங்கள் கிளம்பின. உலகம் அழியப் போவது குறித்தும்இதில் உள்ளதாகவும் வதந்திகள் கிளம்பின.

பாத்திமா ரகசியத்தின் பின்னணி:

போர்ச்சுகல் நாட்டின் பாத்திமா நகரைச் சேர்ந்த கன்னியாஸ்திரீ லூசியா டாஸ் சான்டோஸ். அவருக்கு இப்போது 93 வயதாகிறது. லூசியா மற்றும் இருகன்னியாஸ்திரீகளுக்கு 1917-ம் ஆண்டு பாத்திமா நகரில், கன்னி மேரி காட்சி கொடுத்தார். அப்போது அவர்களுக்கு கன்னி மேரி சில தகவல்களைச்சொன்னார்.

தான் பெற்ற தகவல்களை தனக்குள் வைத்துக் கொண்ட லூசியா, 1940-ல் கன்னி மேரி மூலம் தான் பெற்ற தகவல்களின் அடிப்படையில் சிலவற்றைக்கணித்து வாட்டிகன் சிட்டிக்கு போர்ச்சுக்கீசிய மொழியில் எழுதினார். ஆனால் அவற்றை வெளியிடாமல் அடுத்தடுத்து வந்த போப்பாண்டவர்கள்ரகசியமாக வைத்திருந்தனர்.

இந்தக் கணிப்புகள் குறித்து உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவர்களிடையே பரபரப்பும், ஆவலும் ஏற்பட்டது. இதை அடிப்படையாக வைத்து பலபுத்தகங்கள் எழுதப்பட்டன. உலகின் அழிவு குறித்து இந்தக் கணிப்புகளில் கூறப்படடிருந்ததாகவும் ஊகம் கிளம்பியது. ஒரு விமானக் கடத்தல் குறித்தும் கூடபாத்திமா ரகசியத்தில் கூறப்பட்டுள்ளாகவும் கூறப்பட்டது.

தொடர்ந்து இதுமாதிரியான கணிப்புகள் வந்ததால், குழப்பம் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு இவற்றை வெளியிட வாட்டிகன் சிட்டி முடிவு செய்தது.லூசியா எழுதியவற்றின் நகலை ஜூன் 26-ம் தேதி வாட்டிகன் சிட்டியில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. போர்ச்சுக்கீசியமொழியில் உள்ள இந்தக்கணிப்புகளுக்கான விளக்கத்தை கார்டினால் ஜோசப் கொடுத்துள்ளார்.

20-ம் நூற்றாண்டின் நிகழ்வுகள், கிறிஸ்தவத்திற்கு எதிரான போராட்டங்கள், கிறிஸ்தவர்களுக்கு ஏற்படும் தீங்குகள் குறித்தும் இதில்கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த போப்பாண்டவர்கள் குறித்தும் கூறப்பட்டுள்ளது.

கணிப்பில் கூறியிருந்தபடியே, 1981-ம் ஆண்டு மே 13-ம் தேதி பாத்திமா நகரில் வைத்து போப் ஜான்பாலைக் கொல்ல முயற்சி நடந்தது. துருக்கியைச்சேர்ந்த மெஹ்மத் அலி அக்கா என்பவர் போப்பை நோக்கித் துப்பாக்கியால் சுட்டார். இதில் பலத்த காயமடைந்த போப்பாண்டவர் பின்னர் உயிர்பிழைத்தார்.

தற்போது வெளியிடப்படவுள்ள ரகசியத்திற்கு பாத்திமாவின் மூன்றாவது ரகசியம் என்று பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு வெளியானரகசியங்களில் இரண்டாவது உலகப் போர் ஏற்பட்டது குறித்த கணிப்பு கூறப்பட்டிருந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+