தமிழகத்தில் இன்று
ஜூன் 29-ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிக்குலேஷன் மதிப்பெண் பட்டியல்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் மெட்ரிக்குலேஷன் மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் இம்மாதம் 29-ம் தேதிவழங்கப்படும் என்று தமிழக அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் பரமசிவன் தெரிவித்தார்.
சென்னையில் நிருபர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் மெட்ரிகுலேஷன் தேர்வுகளில் பள்ளிகள் மூலம் பங்கேற்ற மாணவ, மாணவிகள் தங்களதுமதிப்பெண் பட்டியலை இம்மாதம் 29-ம் தேதி பெற்றுக் கொள்ளலாம். அதற்கேற்ப மதிப்பெண்கள் பட்டியல்கள்அந்தந்த பள்ளிகளுக்கே அனுப்பி வைக்கப்படும்.
தனித் தேர்வர்கள் தங்களது மதிப்பெண் பட்டியலை ஜூலை 6-ம் தேதி பெற்றுக் கொள்ளலாம். அவர்கள் தேர்வுஎழுதிய மையத்தில் மதிப்பெண் பட்டியல்கள் வழங்கப்படும்.
மதிப்பெண் பட்டியல் பெற்றவர்கள் மறுக் கூட்டல் கோரி விண்ணப்பிக்க விரும்பினால், மதிப்பெண் பட்டியல்பெற்ற மூன்று நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
அதற்கான விண்ணப்பப் படிவம், கட்டண விவரங்கள் மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் முதன்மைக் கல்விஅதிகாரிகள் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்றார் பரமசிவன்.












Click it and Unblock the Notifications