For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என்-கி-றார் -"தி-ரு"

By Staff
Google Oneindia Tamil News

தலித்கள் பேரணியில் கல்வீச்சு---வன்--முறை

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:

தலித் படுகொலைக்கு சி.பி.ஐ. விசாரணை கேட்டு சென்னையில் விடுதலைச்சிறுத்தைகள் நடத்திய பேரணியில் கல்வீச்சு சம்பவம் நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் புளியங்குடி கிராமத்தில் மூன்று தலித்கள் படுகொலைசெய்யப்பட்டனர். இம்மாவட்டத்தில் மட்டும் கடந்த 2 ஆண்டுகளில் 19 தலித்கள்கொலை செய்யப்பட்டுள்ளதை கண்டித்தும், இச்சம்பவங்கள் தொடர்பாகஒட்டுமொத்தமாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும் விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பினர் சென்னையில் வெள்ளிக்கிழமை பேரணி நடத்தினர்.

விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தலைமையில் தீவுத் திடலில் இருந்துமாலை 4.30 மணிக்கு பேரணி துவங்கியது. 6 மணியளவில் கடற்கரை சீரணி அரங்கைஅடைந்தது.

பேரணி சென்ற வழியில் வாலாஜா சாலையில் உள்ள என்.இ.பி.சி. விமான நிலையஅலுவலகம், பேக்கரி, மேற்கு வங்க சுற்றுலா அலுவலகம் ஆகியவற்றின் மீதுபேரணியில் வந்தவர்கள் கல் வீசினர்.

உடனடியாக போலீசார் தலையிட்டு அமைதி ஏற்படுத்தினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X