தமிழகத்தில் இன்று
கேரள அரசின் "நண்--பா" தகவல் மையம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">திருவனந்தபுரம்:
கேரள மாநில மக்களுக்கு உதவுவதற்காக "பிரண்ட்ஸ் என்ற ஒருங்கிணைந்த தகவல் சேவை மையத்தை கேரளஅரசு ஏற்படுத்தி உள்ளது.
பிரண்ட்ஸ் (FRIENDS - Fast, Reliable, Instant, Efficient, Network for Disbursement of Services) ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு"> - வேகமான,நம்பகமான, உடனடி, சரியான சேவை அளிப்பு மையம் என்பதன் சுருக்கமான இந்த அமைப்பு கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில்அமைக்கப்பட்டுள்ளது. ஜூன் 29-ம் தேதி இம் மையத்தை மாநில முதல்வர் ஈ.கே. நாயனார் திறந்து வைக்கிறார்.
வருமான வரி, சொத்து வரி, தொழில் வரி, வீட்டு வரி உள்ளிட்ட பல்வேறு வரிகள் அரசுத் துறைகளுக்குச் செலுத்தவேண்டிய கட்டணங்கள் தவிர அரசுத்திட்டங்களைப் பற்றியும் முழு விவரங்களை மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் ஒரு முழுமையான அதே சமயம் சிறந்த தகவல் மையமாக இந்தமையம் உருவாக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் மாநகராட்சியும் தகவல் தொழில்நுட்பத் துறையும் இணைந்து இம் மையத்தை உருவாக்கியுள்ளன. மக்களுக்கு உடனடி தகவல்களைத்தெரிவிக்கும் வகையில் இம் மையத்தில் 20 கம்ப்யூட்டர்மயமாக்கப்பட்ட கவுன்டர்கள் உள்ளன. வாரத்தின் அனைத்து வேலை நாட்களிலும் காலை 9மணி முதல் இரவு 7 மணி வரை இம் மையம் திறந்திருக்கும்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications