தமிழகத்தில் இன்று
கெட்டுப் போன முட்டை சாப்பிட்ட 72 மாணவர்களுக்கு வாந்தி
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">தர்மபுரி:
தர்மபுரி அருகே உள்ள பள்ளியில் சத்துணவுடன் கெட்டுப் போன முட்டைகளைசாப்பிட்ட 72 மாணவ , மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு, தர்மபுரி அரசுஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
தர்மபுரி அருகே உள்ள பெரிய குரும்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில்,வெள்ளிக்கிழமை மதியம் சத்துணவுடன் முட்டையும் வழங்கப்பட்டது. இப்பள்ளியில்மொத்தம் 240 மாணவ,மாணவிகள் சத்துணவுடன் முட்டையும்.சாப்பிட்டனர்.
பின்னர் மதிய வகுப்புகள் தொடங்கியது. அப்போது, வகுப்பில் பாடம் படித்துக்கொண்டிருந்த இரண்டு மாணவர்களுக்கும், மூன்று மாணவிகளுக்கும் திடீரென வாந்திமயக்கம் ஏற்பட்டது. இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியை கவுரம்மாவிடம்ஆசிரியர்கள் தகவல் தெரிவித்தனர். அதற்குள், மேலும், பல மாணவ, மாணவிகளும்வாந்தியெடுக்கத் துவங்கினர். இதனால், பள்ளியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த ஆசிரியர்கள், உடனடியாக பள்ளியின் அருகில்வசிப்பவர்கள் உதவியுடன் வாந்தி மயக்கத்திற்கு உள்ளான மாணவ, மாணவிகளுடன்,சத்துணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகள் அனைவரையும் தர்மபுரி அரசுஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
வாந்தி, மயக்கத்திற்கு உள்ளான 5 மாணவர்களுக்கும், 37 மாணவிகளுக்கும் அரசுஆஸ்பத்திரியில் டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். மொத்தம் 72 மாணவ,மாணவிகளில், 2 மாணவர் மற்றும் 3 மாணவிகளுக்கு மட்டும் தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டது.