தமிழகத்தில் இன்று
கோவை சிறையில் போலீஸ்-கைதிகள் -அ-டி-த-டி, வன்-மு-றை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கோவை:
கோவை மத்தியச்சிறையில் வார்டன்களுக்கும், கைதிகளுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் வார்டன்கள் மீதுதாக்குதல் நடத்தினார்கள். இதையடுத்து அங்கு தொடர்ந்து பதட்டம் நீடித்து வருகிறது.
போலீஸ் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
கோவை மத்தியச் சிறையில் அல்உம்மா தீவிரவாதிகள் மற்றும் இந்து இயக்கங்களைச் சேர்ந்த கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
எந்த நேரமும் அங்கு வன்முறை ஏற்படலாம் என்ற காரணத்தால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை சிறையில் உடல்நலம் சரியில்லாமல் இருந்த ஒரு கைதியைப் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அப்போது சோமசுந்தரம் (32)என்ற கைதியும் உடல்நிலைசரியில்லாத கைதியுடன் மருத்துவமனைக்குச் சென்றார்.
அவர் மருத்துவமனைக்குச் செல்ல வார்டன்களிடம் அனுமதி வாங்காததால் வார்டன் வடிவேல் முருகைய்யா என்பவர் அவரை மருத்துவமனைக்குள் செல்லவிடாமல் தடுத்தார்.
அதையும் மீறி கைதி சோமசுந்தரம் மருத்துவமனைக்குச் செல்ல முயற்சிக்கையில் அவருக்கும், வார்டனுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
அப்போது வார்டன் வடிவேல் தன் இடுப்பில் வைத்திருந்த தடியை கைதி சோமசுந்தரம் பறித்து அவரைத் தாக்கத் தொடங்கினார்.
இதையடுத்து பிற கைதிகளும் அவருடன் சேர்ந்து கொண்டு வார்டன் வடிவேலுவைத் தாக்கத் தொடங்கினார்கள்.
சம்பவம் கேள்விப்பட்டு துணை ஜெயிலர் சேகர் சம்பவ இடத்திற்கு வந்தார். அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இதனால் கோவை மத்தியச்சிறையில் பதட்டம் நீடித்து வருகிறது.
கடந்-த ஆண்-டு சென்-னை மத்-தி-ய சிறை-யில் கைதி-கள் -ந-ட-த்தி-ய தாக்-கு-த-லில் --வார்-டன் எரித்-துக் கொல்-லப்-பட்-டார். பல --பா-லீ-சா-ர்கா-ய-ம-டைந்-த-ன--ர் என்-ப-து -கு-றிப்-பி-டத்-தக்-க-து. இந்-த வன்-மு-றை--ய துப்-பாக்-கிச் சூ-டு நடத்-தித் தான் கட்-டுப்-ப-டுத்-த மு-டிந்-த-து.












Click it and Unblock the Notifications