For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அழகிரி.: -- தி-மு-க-வில் நீயா -நானா யுத்தம்

By Staff
Google Oneindia Tamil News

கலர் டிவி ஊழல் வழக்-கில் ஹரிபாஸ்கருக்கு ஜாமீன்-

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:

கலர் டிவி ஊழல் வழக்கில் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர்ஹரி பாஸ்கருக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

தமிழ்நாட்டில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது கிராம பஞ்சாயத்துக்களுக்கு கலர் டிவிக்கள் வாங்கியதில் 10கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த வழக்கில் முன்னாள் தலைமைச் செயலாளர் ஹரிபாஸ்கர், ஐஏஎஸ் அதிகாரிகள் எச்எம் பாண்டே மற்றும்சத்தியமூர்த்தி மேலும் மூன்று பேருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா குற்றவாளியல்ல என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹரிபாஸ்கர் மேல்முறையீடுசெய்தார். இந்த வழக்கு நிலுவையில் இருப்பதைக் காரணம் காட்டி அவர் உச்சநீதிமன்றத்தில் தனக்கு இடைக்காலஜாமீன் வழங்கும்படி கேட்டுக்கொண்டார்.

இந்த மனு மீது உச்சநீதிமன்ற நீதிபதிகள் தாமஸ், ஷா ஆகியோர் விசாரணை நடத்தினார்கள்.

இதைக்கருத்தில் கொண்ட உச்சநீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு விசாரணைநிலுவையில் இருப்பதால் ஹரிபாஸ்கருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

ஆனால் உயர்நீதிமன்ற வழக்கு விசாரணையை தாமதப்படுத்த அவர் காரணமாக இருந்தால் இடைக்கால ஜாமீன்ரத்து செய்யப்படும் என்றும் உச்சநீதிமன்றம் எச்சரிக்கை செய்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X