For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அழகிரி.: -- தி-மு-க-வில் நீயா -நானா யுத்தம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னையில் எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கிறது மலேசியா

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு"> சென்னை:

சென்னையில் ரூ.580 கோடி செலவில் மலேசியத் தொழில்நுட்ப உதவியுடன் அமைக்கப்படும் உயர்மட்ட விரைவுச் சாலைத் திட்டம் குறித்து மலேசியகுழுவினர் தமிழக முதல்வர் கருணாநிதியிடம் ஆலோசனை நடத்தினர்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை வருமாறு:

சென்னை மாநகரில் தற்பொழுது நிலவும் போக்குவரத்து நெரிசலைப் பெரிதும் குறைக்கும் வகையில் பல்வேறு மேம்பாலங்களை தமிழக அரசு அமைத்துவருகிறது. இனி வரும் காலங்களில் போக்குவரத்து நெரிசலே இல்லை என்ற நிலையை உருவாக்கிட, சென்னைத் துறைமுகத்திலிருந்து 34 கிலோ மீட்டர்நீளமுள்ள தாம்பரம் வரையிலான உயர்மட்ட விரைவுச் சாலை (எலிவேட்டட் எக்ஸ்பிரஸ் ஐவே) ஒன்றை அமைத்திட தமிழக அரசு எண்ணியுள்ளது.

இத்திட்டத்தை நிறைவேற்றிடும் வகையில் மலேசிய அரசுடன் தொடர்பு கொண்டு அதற்கான ஒரு விரிவான திட்ட ஆய்வறிக்கையை தயாரித்து வழங்குமாறுதமிழக அரசு கேட்டுக் கொண்டது.

ரூ.580 கோடி ரூபாய் மொத்த மதிப்பீட்டில் அமைத்திட மலேசிய கட்டுமானத் தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் திட்டம் ஒன்றுதயாரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் சென்னை துறைமுகம் தொடங்கி கோயம்பேடு வரையிலான 11.5 கிலோமீட்டர் தூரம் முதல் கட்டமாகவும்,கோயம்பேடு -மதுரவாயல் வரையிலான 3 கிலோ மீட்டர் தூரம் இரண்டாம் கட்டமாகவும், பின்னர் மதுரவாயல் - தாம்பரம் வரையிலான19.5 கிலோ மீட்டர் மூன்றாம் கட்டமாகவும் நிறைவேற்றப்படும்.

மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள குளச்சல் துறைமுகத்தை ஏறத்தாழ 2000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6 ஆண்டுகளில்சர்வதேசத்தரம் வாய்ந்த துறைமுகமாக மேம்படுத்துவதற்கான திட்ட ஆய்வறிக்கையையும் மலேசிய அரசு தயாரித்துள்ளது.

இந்த இரண்டு ஆயவறிக்கைகளையும் முதல்வர் கருணாநிதியிடம் மலேசிய அமைச்சர் டத்தோ சாமிவேலு செவ்வாய் கிழமை வழங்கினார். மேலும் 4கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இவ்விரு திட்டங்களின் செயலாக்கம் குறித்த சி.டி-ராம் மூலம் முதல்வருக்கு விளக்கிக் காட்டப்பட்டது.

இந்நிகழ்ச்சியின்போது தமிழக அரசின் சார்பில் பொதுப் பணித் துறை அமைச்சர் துரைமுருகன், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் தா.கிருஷ்ணன், தலைமைச் செயலாளர்முத்துசாமி, இந்தியாவிற்கான மலேசியத் தூதர் சியூகோய், மலேசிய கட்டுமானத் தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் தலைமை நிர்வாகிகள் டத்தோஅப்துல் ரகுமான், டத் தா சுவா சூன் போக், அஸ்ரி ஆகியோர் இருந்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X