அழகிரி.: -- தி-மு-க-வில் நீயா -நானா யுத்தம்
"பழிக்குப் பழி": மதுரையில் ஆசிரியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">மதுரை:
மதுரையில் உள்ள சொக்கலிங்கபுரத்தில் ஆசிரியர் ஒருவர் வீட்டில் 40 ஆயிரம் ரொக்கமும், 20 பவுன் நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டன.
இச்சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
சொக்கலிங்கபுரம் பகுதியில் வசித்து வருபவர் தியாகராஜன். இவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர்ஆண்டிக்காளை. இரு வீட்டினரும் தெருவில் உள்ள பொதுக்குழாயில் தண்ணீர் எடுப்பது வழக்கம்.
சில தினங்களுக்கு முன் பொதுக்குழாயில் தண்ணீர் எடுக்கச் சென்ற தியாகராஜனின் மகன் வெற்றிச்செல்வனுக்கும், ஆண்டிக்காளைக்கும் தகராறுஏற்பட்டது. அப்போது ஆண்டிக்காளையை வெற்றிச்செல்வன் தாக்கியுள்ளார். படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவத்திற்குப் பழி வாங்கும் நடவடிக்கையாக ஆண்டிக்காளையின் ஆட்கள், வெற்றிச்செல்வனின் வீட்டுக்குள் புகுந்து ரூ 40 ஆயிரம் ரொக்கத்தையும்,20 பவுன் நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications