தமிழகத்தில் இன்று
காஷ்மீர் சுயாட்சி தீர்மானத்துக்கு பாரதீய ஜனதா எதிர்ப்பு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சுயாட்சி தீர்மானத்துக்கு பாரதீய ஜனதா ஒருபோதும்ஆதரவளிக்காது என்று அக் கட்சிப் பொதுச் செயலாளர் வெங்கய்யா நாயுடு தெரிவித்தார்.
சென்னையில் நிருபர்களிடம் அவர் புதன்கிழமை கூறியதாவது:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சுயாட்சி அந்தஸ்து தொடர்பான தீர்மானம் அம் மாநில சட்டப்பேரவையில்நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை பாரதீய ஜனதா ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. ஜம்மு காஷ்மீர் மாநிலசட்டப்பேரவையில் இத் தீர்மானம் அம் மாநில மக்களுக்கு மட்டுமல்ல நாட்டின் நலனுக்கே எதிரானது.
காஷ்மீர் மாநிலத்துக்கு 1953-ம் ஆணடுக்கு முன்பு இருந்த சுயாட்சி அந்தஸ்தை மீண்டும் வழங்கவேண்டும் என்றுஅத் தீர்மானத்தில் கோரப்பட்டுள்ளது. இத் தீர்மானத்தை முக்கிய அரசியல் அனைத்தும் எதிர்த்துள்ளன.நாடாளுமன்றத்திலும் இத் தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்படாது என்றார் வெங்கய்யா நாயுடு.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications