தமிழகத்தில் இன்று
எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.180 கோடி - தமிழக அரசு ஒதுக்கீடு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்த 180.95 கோடி ரூபாயை ஒதுக்கீடுசெய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
2000-2001-ம் ஆண்டுக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஒவ்வொருதொகுதிக்கும் ரூ.77 லட்சம் வீதம் வழங்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்திருந்தார்.
அதன்படி இத்திட்டத்தைச் செயல்படுத்த ஒவ்வொரு தொகுதிக்கும் 77 லட்சம் என்ற அடிப்படையில் ரூ.180.95கோடி ஒதுக்கீடு செய்து அரசு ஆணையிட்டுள்ளது.
மேலும், இத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான வழிகாட்டி நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி ஒவ்வொரு தொகுதியிலும், அரசு அனுமதித்துள்ள ரூ.77 லட்சத்தில் முதல் தவணையாக 50 சதவீதம்,அதாவது ரூ.38.5 லட்சம் விடுவிக்கப்படும். விடுவிக்கப்பட்ட தொகையில் 60 சதவீதம் செலவிடப்பட்டதற்கானசெலவுப் பட்டியலை சரிபார்த்த பின்பு மீதி 50 சதவீதம் அதாவது ரூ.38.5 லட்ச ரூபாய் விடுவிக்கப்படும்.
கணினி பாடத் திட்டத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு ஒவ்வொரு தொகுதியிலும், உயர் நிலை மற்றும்மேல் நிலைப் பள்ளிகளில் இதற்கான வசதிகளுக்காக மூன்று கணினி மையக் கட்டடங்கள் கட்டுவதற்காக ரூ.12லட்சம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் அவரது தொகுதியில் மீதியுள்ள நிதி ரூ.65 லட்சத்தில் மேற்கொள்ள வேண்டியபணிகளை, வழிகாட்டி நெறிறைகளுக்கு உட்பட்டு, தம் விருப்பப்படி பரிந்துரைக்கலாம்.
தமிழ்நாட்டில் 2000-2001-ல் ஜவகர் கிராம மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அனைத்து கிராம ஊராட்சிகளிலும்அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்காக ரூ.96.46 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.












Click it and Unblock the Notifications