தமிழகத்தில் இன்று
பாதிக்கப்பட்ட தலித்துகளுக்கு உதவுங்கள்: முதல்வருக்கு கிருஷ்ணசாமி கோரிக்கை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
கலவரங்களில் பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்றுதமிழக முதல்வர் கருணாநிதியிடம் புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கேட்டுக் கொண்டார்.
அமெரிக்க தமிழ் சங்கங்களின் அழைப்பை ஏற்று அமெரிக்கா செல்லும் கிருஷ்ணசாமி, சென்னையில் முதல்வர்கருணாநிதியைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அப்போது தமிழத்தில் பல பகுதிகளில் நடந்த வன்முறைகளால் பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு தேவையானநிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்று கோரி அது தொடர்பாக ஒரு மனுவை முதல்வரிடம் அவர்வழங்கினார்.
கடலூர் மாவட்டம் புளியங்குடி, விருதுநகர் மாவட்டம் வ.புதுப்பட்டி, திருநெல்வேலி மாவட்டம் கொடியங்குளம்ஆகிய பகுதிகளில் வன்முறையில் வீடுகளை இழந்த தலித் மக்களுக்கு வீடுகள் கட்டித் தர வேண்டும் என்றும் அவர்கேட்டுக் கொண்டார்.