தமிழகத்தில் இன்று
கலர் டிவி வழக்கில் செல்வகணபதி உள்பட 6 பேருக்கு ஜாமீன்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
கலர் டிவி ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் டிஎம்.செல்வகணபதி உள்பட 6 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியின் போது கிராம பஞ்சாயத்துக்களுக்கு கலர் டிவி வாங்கியதில் ரூ 10.16 கோடி ஊழல் நடந்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர்ஜெயலலிதா உள்பட 10 பேர் மேல் வழக்குத் தொடரப்பட்டது.
சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற இவ் வழக்கு விசாரணையின் முடிவில் ஜெயலலிதா, சசிகலா, பாஸ்கரன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். செல்வகணபதிஉள்பட 7 பேருக்கு 5 வருட கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒருவரான ஹரிபாஸ்கர், உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இதையடுத்து அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து செல்வகணபதி உள்பட மற்ற 6 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
இம் மனுக்களை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதி டி. முருகேசன், செல்வகணபதி உள்பட 6 பேருக்கும் ஜாமீன் வழங்கித் தீர்ப்பளித்தார்.
தற்போது வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 6 பேரும் வெள்ளிக்கிழமை விடுவிக்கப்படுகின்றனர்.
யு.என்.ஐ.