தமிழகத்தில் இன்று
டாலர் கடத்திய தமாகா கவுன்சிலர்
சென்னை:
அனுமதியில்லாமல் ரூபாய் 6 லட்சம் மதிப்புள்ள டாலர்களுடன் சிங்கப்பூர் செல்ல முயன்ற தமிழ் மாநில காங்கிரஸ் கவுன்சிலரை சுங்க அதிகாரிகள் கைது செய்தனர்.
இதுகுறித்து தமிழ்மாநில காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவர் மாரிமுத்து வெளியிட்டுள்ள அறிக்கை விபரமாவது:
சென்னை மாநகராட்சியில் த.மா.கா.கவுன்சிலராகப் பதவி வகித்து வந்தவர் பந்தல் கோவிந்தராஜ். இவர் 6 லட்ச ரூபாய் மதிப்புள்ள டாலர்களுடன்சிங்கப்பூர் செல்ல முயன்றார்.
அவர் அனுமதியில்லாமல் டாலர்களை வைத்திருந்ததால் சுங்கஇலாகா அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர்.
இதனை த.மா.கா.தலைவர் வெற்றிவேல் மற்றும் வடசென்னை மாவட்ட தலைவர் ஜோதி ஆகியோர் கட்சி ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின்கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.
அதன்படி கோவிந்தராஜ் கட்சியின் சகல நடவடிக்கைகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட வேண்டும் என்று ஒழுங்கு நடவடிக்கைக் குழு முடிவு செய்தது.
அவர் ஏன் நிரந்தரமாகக் கட்சியிலிருந்து நீக்கப்படவில்லை என்று இன்னும் பத்து நாட்களில் அவருக்குக் கடிதம் அனுப்பப்படவுள்ளதாகவும் அவர்தெரிவித்தார்.