தமிழகத்தில் இன்று
-நாட்டுக்-கு ஒற்று-மைக்கு கூட்டாட்-சியே நல்லது எ-ன்கிறார் நாயுடு
கோவை:
மத்தியில் நல்லாட்சி நடக்கவும், மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு செயல்படவும், கூட்டணி ஆட்சிமிகவும் அவசியம் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசினார்.
ஈரோட்டில் ம.தி.மு.க நடத்தும் தமிழக எழுச்சி மாநாட்டில் கலந்து கொண்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுபேசியதாவது:
நமது நாட்டிற்கு கூட்டணி ஆட்சித் தத்துவம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இங்கு மறுமலர்ச்சித்திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னோடியாக இருந்த அண்ணா விளக்கினார். இதே போன்று எனதுமாமனாரும் தெலுங்கு தேசக் கட்சியின் நிறுவனருமான என். டி ராமராவும் கூறியிருந்தார். பெரியார் நடத்திய சுயமரியாதை இயக்கத்தையும், சமூக நீதியையும் அடிப்படையாகக் கொண்டு வளர்ந்துள்ள ம.தி.மு.கவிற்கும் நிறையஒற்றுமைகள் உண்டு. இரண்டு கட்சிகளும் ஒரே நோக்கத்தில் செயல்படும் கட்சிகளாக உள்ளன.
அரசியலில் நேர்மை, பொது வாழ்வில் தூய்மை, கொள்கையில் உறுதி ஆகிய வைகோவின் நிலையைபாராட்டுகிறேன்.
இந்தியாவில் பல்வேறு மொழி, இனக் கலச்சாரங்கள் இருந்தாலும் ஒற்றுமையாக நாடு இருப்பதைப் போல, தேசியஜனநாயக முன்னணியில் எவ்வளவு வேறுபாடுகள் இருந்தாலும், ஒற்றுமையாக செயல்பட்டு வருகிறோம்.கூட்டணி ஆட்சி தத்துவம் நிலைக்க வேண்டும்.
தனிக் கட்சி, குறிப்பாக காங்கிரஸ் ஆட்சியிலிருந்தபோது கல்வி அறிவு மேம்பாடு, வறுமை ஒழிப்புத் திட்டங்கள்சரியாக செயல்படுத்தப்படவில்லை. இன்றைய பொருளாதார சூழ்நிலையை மேம்படுத்த மத்திய நிதியமைச்சர்யஷ்வந்த் சின்கா கடுமையாக உழைத்து வருகிறார். இதன் பலன் விரைவில் தெரிய வரும்.
தேசியஅளவில் தேர்தலுக்கு முன்பே கூட்டணி அமைவது மிகவும் அவசியம். அதுதான் நாட்டின்எதிர்காலத்திற்கும் பயனள்ளதாக இருக்கும். அவ்வாறு உருவான தேசிய ஜனநாயகக் கூட்டணி அனைவருடையஉணர்வுகளையும் புரிந்து கொண்டு செயல்படுகிறது. மாநில அளவிலான கட்சிகள் தங்கள் பகுதிக்கு என்ன தேவைஎன்பதை அறிந்து கொண்டு, அதனை மத்திய அரசிடம் வலியுறுத்தி பெற்றுத் தர முடியும்.
ஆந்திர மாநிலத்தில் சர்ச் தாக்குதலுக்குள்ளானது. சர்ச்சில் குண்டு வெடித்தது. இவர்கள் மீது கடுமையானநடவடிக்கை மேற்கொள்ள அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. சமுதாய அமைதியைச் சீர்குலைக்கும் எந்த ஒருநிகழ்ச்சியையும் தடுக்கவும், தண்டிக்கவும் ஆந்திர அரசு முயன்று வருகிறது. நடவடிக்கை மேற்கொள்ளும்.
இவ்வாறு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசினார்.
-
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications