தமிழகத்தில் இன்று
போலீஸ்காரர் மீது வெடிகுண்டு வீசிய ரவுடி விடுதலை
சென்னை:
போலீஸ்காரர் மீது நாட்டு வெடிகுண்டு வீசி மிரட்டியது தொடர்பாக கைது செய்யப்பட்ட ரவுடி விடுதலை செய்யப்பட்டார்.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி சேரா. இவர் மீது கொலை, கொலைமுயற்சி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
இவர் போலீஸ் மீது வெடிகுண்டு வீசியது தொடர்பாகவும், போலீசாரைப் பணி செய்ய விடாமல் தடுத்தது தொடர்பாகவும் கைது செய்யப்பட்டார்.
இவ்வழக்கு சென்னை, எழும்பூர், பத்தாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகள் பலர் போலீசுக்குஎதிராக சாட்சியம் அளித்து பல்டி அடித்தனர்.
எனவே சேராவிற்கு எதிராக சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்படாததால் நீதிபதிகள் அவரை விடுதலை செய்து தீர்ப்பளித்தனர்.
இந்த வழக்கில் சேரா விடுவிக்கப்பட்டது குறித்து போலீஸ் அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications