For Quick Alerts
For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
வைகோவின் நல்ல சிந்தனைகளுக்குத் துணை நிற்பேன் - திருநாவுக்கரசு
சென்னை:
தமிழகத்தில் வளர்ந்து வரும் ஜாதி வெறியைத் தகர்க்க நினைக்கும் வைகோவின் நல்லசிந்தனைகளுக்கும், முயற்சிகளுக்கும் துணை நிற்பேன் என்று எம்.ஜி.ஆர் அதிமுகபொதுச் செயலாளர் திருநாவுக்கரசு கூறியுள்ளார்.
மதிமுக நடத்திய ஈரோடு மாநாட்டில் கலந்து கொள்ள முடியாதது தொடர்பாகவைகோவுக்கு, திருநாவுக்கரசு அனுப்பிய கடிதத்தில், ஈரோடு மாநாட்டில் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்திருந்தேன். ஆனால் எங்களது கட்சியின் அறந்தாங்கிஎம்.எல்.ஏ. அன்பரசனின் திடீர் மறைவு காரணமாகவும், எனது உடல் நலக்குறைவுகாரணமாகவும் கலந்து கொள்ள இயலவில்லை.
21 ஆண்டுகளாக எம்.பியாக இருந்து தமிழர் நலனுக்காக குரல் கொடுத்து வரும்தலைவர் நீங்கள். உங்களது முயற்சிகளுக்குத் துணை நிற்பேன் என்று திருநாவுக்கரசுகூறியிருந்தார்.
Comments
Story first published: Monday, July 3, 2000, 5:30 [IST]