தமிழகத்தில் இன்று
வாஜ்பாயின் யோசனையைக் கேட்கிறார் சந்திரிகா
கொழும்பு:
இலங்கையில் சமீபத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்புச்சீர்திருத்தம் பற்றி இந்தியாவின் கருத்தைக் கேட்க இலங்கை அதிபர் சந்திரிகாகுமாரதுங்கா முடிவு செய்துள்ளார்.
இதையடுத்து, தனக்கு மிகவும் நம்பிக்கையாக உள்ள கேபினெட் அமைச்சர் லட்சுமண்ஜெயகோடியை அவர் இந்தியாவுக்கு அனுப்பியுள்ளார்.
அதிபரின் செயலர் பாலபட்டாபெண்டியுடன் செவ்வாய்க்கிழமை காலை இந்தியாவுக்குலட்சுமண் ஜெயகோடி சென்றுள்ளார். அவர், இந்தியப் பிரதமர் வாஜ்பாய் உள்படஅமைச்சர்கள் சிலரைச் சந்தித்துப் பேசுகிறார். இந்தியாவுக்கான புதிய இலங்கைத்தூதராக நியமிக்கப்படவுள்ள சேனக டயஸ் பண்டாரநாயகாவும் அமைச்சருடன்இந்தியா சென்றுள்ளார்.
கடந்த சில மாதங்களாக இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் புதியஅரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் பற்றி அவர்களது கருத்துக்களை லட்சுமண்ஜெயகோடி கேட்டறிவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சோதனை முறையில் புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தம் இலங்கையில்நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. புதிய அரசியலமைப்புச் சட்டம் இம் மாதம்இலங்கை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட உள்ளது. இது தொடர்பாக இலங்கைஅரசுக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே வெள்ளிக்கிழமை பேச்சு நடைபெற உள்ளதுகுறிப்பிடத்தக்கது.
இலங்கை அரசின் இப் புதிய சீர்திருத்தத்தை நிராகரித்துவிட்டதாக விடுதலைப் புலிகள்அறிவித்துள்ளனர். இலங்கை அரசின் இந் நடவடிக்கை எதிர்பார்த்ததுதான் என்றும்ஆச்சரியப்படவில்லை என்றும் தமிழ் அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளன.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications