தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறோம் - வாஜ்பாய்
Subscribe to Oneindia Tamil
போலி கிரெடிட் கார்டு கொடுத்த இலங்கைத் தமிழர் கைது
சென்னை:
போலி விசா கிரெடிட் கார்டை பயன்படுத்தி சென்னை துணிக் கடையில் ஒன்றரை லட்ச ரூபாய்க்கு பட்டுப்புடவைகள் வாங்கிய இலங்கைத் தமிழர் கைது செய்யப்பட்டார்.
இலங்கையை சேர்ந்த தமிழர் விபுலன் அழகுரத்தினம். வயது 30. இவர் கனடா நாட்டு குடியுரிமை பெற்றவர்.சென்னை வந்துள்ள இவர் இங்குள்ள பிரபலமான ஜவுளிக் கடையில் பட்டுப் புடவைகள், துணிமணிகள்வாங்கினார்.
அவற்றிற்கான பணத்திற்கு தன்னிடம் இருந்த கிரெடிட் கார்டை கொடுத்தார். இதுபற்றி அங்கிருந்த ஊழியர்களுக்குசந்தேகம் எழுந்தது.உடனே
நடந்த விசாரணையில் அது போலி எனத் தெரிந்தது. போலீசில் புகார் செய்தனர்.
போலி கிரடிட் கார்டு கொடுத்த விபுலன் அழகு ரத்தினம் இப்போது கம்பி எண்ணுகிறார்.












Click it and Unblock the Notifications