For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

மரபுசாரா எரிசக்தி திட்டம்: தமிழகத்துக்குப் பிரதமர் பாராட்டு

கயத்தார்:

தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள ஒருங்கிணைந்த மரபுசாரா எரிசக்தித் திட்டத்துக்குப்பிரதமர் வாஜ்பாய் பாராட்டுத் தெரிவித்தார். மற்ற மாநிலங்களும் தமிழகத்தைப்பின்பற்றவேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

கயத்தாரில் 15 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தையும் அங்குகட்டப்பட்டுள்ள காற்றாலை தொழில்நுட்பத்துக்கான பயிற்சி மையத்தையும் அவர்புதன்கிழமை துவக்கி வைத்துப் பேசியதாவது:

தமிழகத்தில் மரபுசாரா எரிசக்தியைப் பயன்படுத்த பல திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.இது பாராட்டப்படக்கூடியது. தமிழகத்தின் இந்த ஒருங்கிணைந்த மரபுசாரா எரிசக்தித்திட்டங்களை ஒரு எடுத்துக்காட்டாக எடுத்துக் கொண்டு மற்ற மாநிலங்களும்செயல்படவேண்டும்.

இயற்கையாக உள்ள எரிசக்தி வளங்களைப் பயன்படுத்திக் கொள்ள அனைத்துமாநிலங்களும் முன் வரவேண்டம். அதற்கான திட்டங்களைத் தீட்டிசெயல்படுத்தவேண்டும். பொதுத் துறையிலோ அல்லது தனியார் துறையிலோமேற்கொள்ளப்படும் மின் திட்டங்களில் இவற்றை அமல்படுத்தவேண்டும்.

மரபுசாரா எரிசகத்தி தொடர்பான முழுமையான கொள்கைத் திட்டத்தை மத்திய அரசுவிரைவில் அறிவிக்கும். அதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.புதிய நூற்றாண்டில் அனைத்துத் துறையிலும் இயற்கையாக உள்ள வளங்களைப்பயன்படுத்தவேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.

நாட்டில் உள்ள அனைத்து வளங்களையும் பயன்படுத்தி நாட்டின் மின் உற்பத்தியைஅதிகரிக்கத் தேவையான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. மத்தியஅரசின் முயற்சிகளுக்கு பெரிய நிறுவனங்களும், தனியார்களும் முன் வந்து நிறையமுதலீடு செய்யவேண்டும் என்றார் வாஜ்பாய்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X