தமிழகத்தில் இன்று
மகள், மனைவியைச் சுட்டுக் கொன்று கணவரும் தற்கொலை
சென்னை:
திமுக முதல்வர் கருணாநிதி கூறும் மாநில சுயாட்சி வேறு. ஜம்மு காஷ்மீர் முதல்வர்பரூக் அப்துல்லா கூறும் சுயாட்சி வேறு என்று விளக்கம் அளித்துள்ளார் ராஜீவ்காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி.
ஜம்மு - காஷ்மீர் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் குறித்து அவர்வெளியிட்டுள்ள அறிக்கை:
ஜம்மு, காஷ்மீர் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள சுயாட்சி தீர்மானம்பிரிவினைக்கு வித்திடும். மத்திய அரசிடம் இருக்கும் பாதுகாப்பு, வெளியுறவு, தகவல்தொடர்பு தவிர மற்ற அனைத்து அதிகாரங்களும் தனக்கு வேண்டும் என்று இதுகோருகிறது.
மத்திய அரசு இதற்கு ஒப்புதல் அளிக்காததை தமிழக ராஜீவ் காங்கிஸ் கட்சிவரவேற்கிறது. ஆனால் தமிழக முதல்வர் சுயாட்சி கொள்கை வேறு. மத்திய அரசிடம்குவிந்து கிடக்கும் அதிகாரங்கள் மாநில அரசுகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்என்பதே முதல்வர் கருணாநிதியின் கொள்கை. இதை, முதல்வரும் கருணாநிதியும்தெளிவு படுத்தியிருக்கிறார் என்று அவர் கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications