தமிழகத்தில் இன்று
ராமதாஸ் ஒரு வன்முறை விரும்பி என்கிறார் திருமாவளவன்
சென்னை:
அமைதியை துளியும் விரும்பாதவர் டாக்டர் ராமதாஸ். வன்முறையை நம்பியே வாழ்கிறார் என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாளவன்குற்றம் சாட்டினார்.
சென்னையில் வெள்ளிக் கிழமை திருமாவளவன் அளித்த பேட்டி:
கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறைக்கு ராமதாசும், அவரது கட்சியினரும் தான் காரணம். வன்முறை தொடர வேண்டும் என்றுராமதாஸ் விரும்புகிறார். அமைதியை அவர் விரும்புவதில்லை.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ராமதாஸ், என்னுடன் பேசி நட்போடு இருந்தார். இப்போது பேசுவதற்கு கூட அவர் விரும்புவதில்லை. இதற்கு காரணம்அவர் அமைதியை விரும்பவில்லை என்பது தான்.
கடலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்த்தாலே வன்முறைக்கு யார் காரணம் என்பது தெரிந்து விடும். பாதிக்கப்பட்ட பகுதிகளைமூப்பனார் பார்வையிட வேண்டும். அவர் தான் எங்களைப் பொறுத்தவரையில் நடுநிலையாளர்.
இப்பிரச்னையில் அரசாங்கங்கள் எங்களுக்கு ஆதரவாக இருப்பதாக ராமதாஸ் கூறுவது அபத்தம். எங்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் 75 பேர்கைது செய்யப்பட்டுள்ளனர். 5 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ராமதாஸ் அ.தி.மு.க கூட்டணியில் சேர முயற்சிக்கிறார். கருணாநிதி, அவரை தி.மு.க அணியில் இருந்து கழற்றி விட பார்க்கிறார். ராமதாஸ்அ.தி.மு.க கூட்டணிக்கு வந்தால் நாங்கள் அங்கே இருக்க மாட்டோம். வெளியேறி விடுவோம். சாதிக் கட்சிகளுடன் நாங்கள் அரசியல் நடத்தமாட்டோம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications