தமிழகத்தில் இன்று
மருத்துவமனையில் நடிகை காந்திமதி
சென்னை:
நெஞ்சுவலி காரணமாக நடிகை காந்திமதி சென்னை அப்போலோ மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பதினாறு வயதினிலே படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை காந்திமதி. பல விதமானகேரக்டர்களில் நடித்து அசத்தியவர். இப்போது ஆபத்தான நிலையில் அப்போலோ மருத்துவமனையில்உள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை மாலை அவருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக அவரைஅப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது, ரத்தக்குழாயில அடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், உடனடியாக இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும்என்றும் தெரிவித்தனர்
அதன்படி அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால், அதற்குள் அவரதுஉடல் நிலை மேலும் மோசமானதை அடுத்து, தற்போது தீவிர சிசிக்சை பிரிவில் சேர்க்கப்ட்டுசிகிச்சை பெற்று வருகிறார்.
பழம்பெரும் நடிகையான காந்திமதி, தற்போதைய சினிமாவுக்கு ஏற்றாற்போல் நடித்து புகழ்பெற்றவர். திருமாணமாகாதவர்.












Click it and Unblock the Notifications