தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

வடக்கு அயர்லாந்தில் தொடரும் வன்முறை

பெல்பாஸ்ட்:

வடக்கு அயர்லாந்தில் கிறிஸ்தவர்களின் இரு பிரிவினருக்கிடையிலான மோதல் மற்றும் வன்முறை எட்டாவது நாளாகஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்தது.

தலைநகர் பெல்பாஸ்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு போலீசார் மேல் கல்வீச்சுத் தாக்குதல் நடந்தது. பல வாகனங்கள் தீ வைத்துக்கொளுத்தப்பட்டன.

வடக்கு அயர்லாந்தில் பிராட்டஸ்ட்டன்ட் பிரிவினருக்கும், கத்தோலிக்கர்களுக்கும் இடையே 30 ஆண்டுகளாக மோதல் இருந்துவருகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக இரு பிரிவினரும் வன்முறையில் இறங்கியுள்ளனர்.

இந்த நிலையில், பிராட்டஸ்டான்ட் பிரிவினர் கத்தோலிக்கர்கள் வாழும் பகுதியில் ஊர்வலம் நடத்த போலீசாரிடம் அனுமதி கேட்டுவிண்ணப்பித்திருந்தனர். அதற்கு கத்தோலிக்கர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்துவன்முறை ஏற்பட்டது.

வன்முறைச் சம்பவத்தையடுத்து அங்கு போலீஸ் படைகள் குவிக்கப்பட்டுள்ளது. எந்த நேரத்திலும் அசம்பாவிதச் சம்பவம் ஏற்படலாம்என்பதால் போலீசார் ரோந்துப் பணியில் தீவிரமாய் ஈடுபட்டு வருகின்றனர்.

தலைநகர் பெல்பாஸ்டிலும் தீவிர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வடக்கு அயர்லாந்தில் சுமார் 30 வருடங்களாக பிராட்டஸ்டான்ட் மற்றும் கத்தோலிக்கர்களுக்கிடையே நடந்து வரும் மோதலால்இதுவரை 3600 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+