தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
மக்களோடு சேர்ந்து மருத்துவ சோதனை செய்து கொண்ட மந்திரி
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் இளையாங்குடியில் நடந்த இலவச மருத்தவப் பரிசோதனை முகாமில் தமிழக தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் தமிழ்க் குடிமகன் இலவச மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டார்.
தமிழஅரசு வருமுன் காப்போம் என்ற இலவச மருத்துவப் பரிசோதனைத் திட்டத்தை அமல்படுத்திவருகிறது. கிராமங்கள் தோறும் இலவச மருத்துவ முகாம்கள் இத்திட்டத்தின் கீழ் நடத்தப்படுகிறது.
இளையாங்குடி அருகே பெரும்பச்சேரி என்ற கிராமத்திலும் இதுபோன்ற மருத்துவ முகாம் நடந்தது.இந்த முகாமை அமைச்சர் தமிழ்க் குடிமகன் பார்வையிட்டார். பின்னர் தானும் பரிசோதனை செய்துகொண்டார். அவருக்கு டாக்டர்கள் பிளட் பிரஷர் குறித்து சோதனை செய்தனர்.
மக்களோடு சேர்ந்து மந்திரியும் மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டதை கிராமத்தினர் வியப்போடுபார்த்தார்கள்.












Click it and Unblock the Notifications