தமிழகத்தில் இன்று
ஒலிம்பிக் போட்டிக்கு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்
சிட்னி:
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஒலிம்பிக்போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை விரிவான முறையில் ஆஸ்திரேலிய அரசுசெய்துள்ளது.
எந்தவிதமான சூழ்நிலையயும் சமாளிக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படை கூறியுள்ளது. வன்முறைஇல்லாத நாடு என்றபெயர் ஆஸ்திரேலியாவுக்கு இருந்தாலும் கூட, வன்முறை எந்தரூபத்திலும் வந்து விடக் கூடாது என்று ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படை கவனமாகஉள்ளது.
போட்டியின்போது வன்முறை ஏற்படக் கூடிய வாய்ப்பு உள்ளதாக 100 இடங்கள்அடையாளம் காணப்பட்டுள்ளன. வீரர்களைக் கடத்திச் செல்லக் கூடியவாய்ப்புகளையும் அதிகாரிகள் விடவில்லை. அதற்கான முன்னேற்பாடுகளையும்ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படை மேற்கொண்டுள்ளது.
ஒலிம்பிக் போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கடந்த நான்கு ஆண்டுகளாகவேஆஸ்திரேலிய பாதுகாப்புப் படை செய்து வருகிறது. இதற்காக பல்வேறு படைகளும்அமைக்கப்பட்டுள்ளன.
1998-ம் ஆண்டு ஆப்பிரிக்காவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் ஓசாமாபின்லேடனின் தீவிரவாத அமைப்பு வைத்த வெடிகுண்டுக்கு 200-க்கும் மேற்பட்டோர்இறந்தனர். இதையும் மனதில் கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆஸ்திரேலியபாதுகாப்புப் படை செய்து வருகிறது.
ஆஸ்திரேலியாவின் இனவாதத் தலைவர் சார்லஸ் பெர்கின்ஸ், சிட்னிக்கு வரும்வெளிநாட்டவர்கத்ை தாக்குவோம் என்று எச்சரித்துள்ளார். பல ஆண்டுகளாகவே,ஆஸ்திரேலிய மக்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார். எனவேஒலிம்பிக் போட்டியைப் பார்க்க வரும் வெளிநாட்டவர்களின் கார்களைக்கொளுத்துவோம். அவர்களையும் தாக்குவோம் என்று கடந்த ஏப்ரல் மாதம்எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் கருத்தில் கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications