தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

அரிசி கடத்தலைத் தடுக்க 20 சிறப்பு போலீஸ் படைகள்

சென்னை:

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தமிழக போலீசார் அதிரடி நடவடிக்கையில்இறங்குகின்றனர்.

மாநிலத்தின் எல்லையோரப் பகுதிகளை கண்காணிப்பதற்கென 20 விசேஷப் படைகள்அமைக்கப்பட்டுள்ளன. இப்படைகள் திங்கள் கிழமை முதல் அதிரடி நடவடிக்கையில்இறங்குகின்றன என்று தமிழ்நாடு உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ்ஐ.ஜி. ராதாகிருஷ்ணன் ராஜா தெரிவித்தார்.

சென்னையில் சனிக்கிழமை அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

பெட்ரோலியப் பொருட்கள் கலப்படம் செய்து விற்கப்படுவதாக தகவல்கள்வந்துள்ளன. இதை தடுப்பதற்காக பென்சிலின், நாப்தா போன்ற பெட்ரோலியப்பொருட்களை வாங்குவதில் கட்டுப்பாடு விதித்து அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது.

இச்சட்டப்படி பெட்ரோலில் பென்சிலின், நாப்தா போன்ற பொருட்கள் கலந்துவிற்கப்படுவதை தடுக்க அதிரடிச் சோதனை செய்ய டி.எஸ்.பி. அந்தஸ்தில் உள்ளஅதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அப்படி சோதனை செய்து, கைப்பற்றப்படும் போலி பெட்ரோலியப் பொருட்களைசேமித்து வைப்பதற்கு எங்களுக்கு வசதியில்லை. எரியும் தன்மை கொண்ட அந்தபொருட்களை காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்க முடியாது. எண்ணெய்நிறுவனங்கள் அதை பாதுகாப்பாக வைக்க முன் வரவேண்டும்.

ரேஷன் அரிசி கடத்தல் ஒரு தொடர் கதையாக இருக்கிறது. இதை முற்றிலும் ஒடுக்க 20சிறப்பு போலீஸ் படைகள் அமைக்கப்படுகின்றன. 200 போலீசார் இவற்றில்ஈடுபடுத்தப்படுகின்றனர். ஒரு படைக்கு 2 சப் இன்ஸ்பெக்டர்கள், 2 தலைமைக்காவலர்கள், 20 போலீசார் உள்ளனர். இவர்களுக்கென ஒரு வேன் வழங்கப்படும்.

இப்படையினர் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, குடியாத்தம், கிருஷ்ணகிரி,ஈரோடு, கோவை, உத்தமபாளையம், குளித்தலை ஆகிய எல்லையோரப் பகுதிகளில்திங்கள் முதல் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

ரேஷன் அரிசி, மண்ணெண்ணெய் கடத்தினாலோ அல்லது பதுக்கி வைத்தாலோ கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+