தமிழகத்தில் இன்று
தனிமையிலே இனிமை காண முடியுமா?
பான் (ஜெர்மனி):
தனித்து வாழ்பவர்களும், வேலையில்லாமல் சும்மா இருப்பவர்களுக்கு அதிக அளவில் மனம் மற்றும் உடல் நல பாதிப்பு ஏற்படுகிறது எனஜெர்மனியில் உள்ள நிறுவனத்தின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
தனிமை கொடுமையானது என்பது எல்லோருக்கும் தெரியும். சிலருக்கு அது இனிமையாக இருக்கும். அதே போல் வேலை ஏதுமின்றி இருப்பதும்கொடுமையானது. வேலையில்லாமல் தனித்து வாழ்வோரின் நிலைமை மிகப் பரிதாபமானது. தனிமை மற்றும் வேலையின்மையின் கார்ணமாக பலரும்உடல், மன ரீதியாக பாதிக்கப்படுகின்றனர் என ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.
இது குறித்து ஏப்ரல் மாதம் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பின்படி திருமணமானவர்களில் 11சதவீதத்தினரும்,விவாகரத்து பெற்றவர்களில் 16சதவீத்த்தினரும், கணவரை இழந்தவர்களில் 24 சதவீதத்தினரும் ஜெர்மனியில் உடல்நிலை மனநிலை பாதிக்கப்பட்டுள்ளனர் அல்லது விபத்தில்சிக்கியிருக்கின்றனர் என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.
மேலும் வேலையை இழந்தவர்களில் 8 சதவீத்தினரும், வேலையில்லாத 12 சதவீதம் பேரும் உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கிறார் அல்லது விபத்தில்சிக்குகின்றனர் எனவும்ஆய்வு கூறுகிறது.
யு.என்.ஐ.