தமிழகத்தில் இன்று
ரூ. 4 கோடியில் தமிழகத்தில் பசுமைப் போர்வைத் திட்டம்
சென்னை:
தமிழகத்தின் மாநகராட்சிப் பகுதிகளில் பசுமைப் போர்வை ஏற்படுத்தி மாசுஏற்படுத்துவதைத் தவிர்த்து சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காக மத்திய அரசு, தமிழகஅரசுக்கு ரூ. 4.45 கோடி ஒதுக்கியுள்ளது.
இத்திட்டம் சென்னை, மதுரை,கோயம்புத்தூர்,சேலம், திருநெல்வேலி ஆகியமாநகராட்சிப் பகுதிகளிலும், சென்னையை சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளிலும்வனத்துறை மூலம் செயல்படுத்தப்படும்.
இத்திட்டத்திற்கு மாநில அரசு தனது பங்காக 55.7 லட்சம் ரூபாய் வழங்க ஒப்புதல்வழங்கியுள்ளது. மத்தியஅரசு 4 கோடி ரூபாயை மாநில மாசுக் கட்டுப்பாடுவாரியத்திற்கு அளித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் 2000- 2001ம் நிதியாண்டில் மரம்நடும் பணி மேற்கொள்ளப்படும்.
தமிழக வனத்துறை அளித்த மதிப்பீட்டின்படி இரண்டு மீட்டருக்கு மேல் உயரமுள்ளமரக்கன்றுகளை ஒரு வருட காலத்திற்குப் பராமரித்து மாநகராட்சி வசம்ஒப்படைப்பதற்கு, மரக்கன்று ஒன்றுக்கு 155 ரூபாய் செலவிட அனுமதிவழங்கப்பட்டுள்ளது.
இந்த மதிப்பீட்டில் இரண்டு மீட்டருக்கு மேல் உயரமுள்ள மரக்கன்று வளர்ப்பதற்கு 55ரூபாயும், மரக்கன்று நடுவதற்கு தேவையான இடங்களை தேர்ந்தெடுத்து குழிகள்தோண்டி, நட்டு, தண்ணீர் விட்டு பராமரிப்பதற்கு 90 ரூபாயும், இத்திட்டத்தினைமேற்பார்வை செய்யவும் இத்திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான 20ரூபாயும் அடங்கும்.
இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பணமாக 2.80 கோடி ரூபாய்வழங்கவேண்டுமென வனத்துறையின் கோரிக்கையை ஏற்று இத் தொகையினைசெலவு செய்ய உரிமம் பெற்று செலவிட அனுமதியளித்துள்ளது.
திட்ட மதிப்பீட்டுத் தொகையான மொத்தம் 4.55 கோடி ரூபாயில் இதுவரை 38.19லட்ச ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் சுமார் 700 மரக்கன்றுகள்மாநகராட்சிப் பகுதிகளில் நடப்பட்டுள்ளன.
நகராட்சிகளில் மரம் வளர்க்கும் திட்டம் எந்த வித தடங்கலும் இல்லாமல்செயல்படுவதற்காக மாநகராட்சி ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வீதம் வழஙக 75.50லட்சம் ரூபாயை மத்திய அரசு அளித்துள்ளது.