தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

பாகிஸ்தான் ரயிலில் குண்டுவெடிப்பு: 9 பேர் சாவு

கராச்சி:

பாகிஸ்தானிலுள்ள ஹைதராபாத்தில் ரயிலில் குண்டு வெடித்ததில் 9 பயணிகள் உடல் சிதறி இறந்தனர். 24 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

வட கிழக்கு கராச்சி நகரிலிருந்து 140 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஹைதராபாத்தில் இச்சம்பவம் நடந்தது.

மிர்பூர்காசிலிருநது கராச்சி சென்ற மெஹ்ரான் எக்ஸ்பிரஸ் ரயில் ஹைதராபாத்தில் சிறிது நேரம் நின்றது. அங்கிருந்து கிளம்பிய சில வினாடிகளில் அந்த ரயிலில்குண்டுவெடித்தது.

இச்சம்பவத்தில் இறந்த 9 பேரில் 3 பெண்கள், 2 குழந்தைகள் அடங்குவர். காயமடைந்தவர்களில் 5 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.குண்டுவெடிப்புச் சம்பவத்திற்குக் காரணமானவர்கள் குறித்து போலீசார் புலன்விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஹைதராபாத் உயர்போலீஸ் அதிகாரி ஒருவர் இச்சம்பவம் குறித்துக் கூறுகையில், இதுவரை இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் குறித்த தகவல்கள்எதுவும் தெரியவில்லை. ஏற்கனவே ஹைதராபாத்தில் நடந்த பல குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்குக் காரணமான தீவிரவாத அமைப்பைச்சேர்ந்தவர்களுக்கு இச்சம்பவத்தில் தொடர்பிருக்கலாம். நாங்கள் பல்வேறு கோணங்களில் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளோம் என்றார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+