தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

பிஜியில் மீண்டும் செளத்ரி பிரதமராக முடியாது: புரட்சிக்காரர்கள்

சுவா:

பிஜியில் மீண்டும் மகேந்திர செளத்ரி பிரதமராவதை நாங்கள் ஒருபோதும் ஒப்புக் கொள்ள மாட்டோம் என்று புரட்சிக்காரர்களின் செய்தித்தொடர்பாளார்ஜோ நாடா தெரிவித்தார்.

பிஜியில் இந்திய வம்சாவளிப் பிரதமர் மகேந்திர பால் செளத்திரியும், அவரது அமைச்சரவை சகாக்களையும் புரட்சிக்காரர்கள் தலைவர் ஜார்ஜ் ஸ்பீடு கடந்தமே மாதம் 19 ம் தேதி பிணைக்கைதிகளாகப் பிடித்து பாராளுமன்ற வளாகத்தில் சிறைவைத்தனர். பின்னர் ராணுவம் ஆட்சியைப் பிடித்தது.

இந்நிலையில் புரட்சிக்காரர்களுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து முதலில் 9 பிணைக்கைதிகள்விடுவிக்கப்பட்டனர்.

அதற்குப்பின் பிரதமர் மகேந்திர செளத்ரியும், பிற அமைச்சர்களும் விடுவிக்கப்பட்டனர்.

இதையடுத்து புரட்சிக்காரர்களின் செய்தித் தொடர்பாளர் ஜோ நாடா கூறுகையில், பிஜியில் ஜனநாயக முறைப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட என்னைப் பிரதமராகமக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார் பிரதமர் மகேந்திர பால் செளத்ரி.

ஆனால் அதற்கு நாங்கள் ஒருபோதும் ஆதரவளிக்க மாட்டோம். 56 நாட்களுக்குப்பின் விடுவிக்கப்பட்டதே பெரிய விஷயம். அதற்காக அவர்மகிழ்ச்சியடைய வேண்டுமே தவிர மீண்டும் பிரதமர் பதவி வேண்டும் என்று அவர் கேட்பது முறையல்ல.

பிஜியில் பூர்வகுடியைச் சேர்ந்த ஒருவர்தான் பிரதமர் பதவியிலோ, அதிபர் பதவியிலோ இருக்க முடியும். அரசியல், நிர்வாகம், கல்வி, வேலைவாய்ப்புபோன்றவற்றில் பிஜி பூர்வகுடிமக்கள் பயனடையும் வகையில் அவர்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கப்படும்.

பிஜி நாட்டில் வாழும் இந்தியர்களுக்கு அதிக சலுகைகள் எதையும் கொடுக்க முடியாது.

ராணுவத்தினரால் அதிபராக நியமிக்கப்பட்ட இடைக்கால அதிபர் கராசேவை நாங்கள் அதிபராக ஏற்றுக்கொள்ள முடியாது. புதிய பிரதமராக எபிலிகனாய்மாவியை நியமிக்க வேண்டும். புதிய அமைச்சரவையில் இரண்டு இந்தியர்களை சேர்க்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆஸி. உதவியை நாடுகிறது அமெரிக்கா:

இந்நிலையில் பிஜி பிரச்சனைக்குத் தீர்வு காணவும், புதிய அரசு அமைப்பதிலும் ஆஸ்திரேலியாவின் உதவியை நாடத் தீர்மானித்துள்ளதாக அமெரிக்க ராணுவசெகரட்டரி வில்லியம் கோஹன் தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் கூறினார்.

அவர் இதுகுறித்துக் கூறுகையில் ஏறத்தாழ 56 நாட்கள் நடந்த பிஜி பிரச்சனை முடிவுக்கு வந்தது குறித்து அமெரிக்கா மிகவும் மகிழ்ச்சியடைகிறது. பிஜியில்புதிய அரசு அமைப்பதில் ஆஸ்திரேலியா நாட்டுடன் அமெரிக்கா ஆலோசனை நடத்தும்.

பிஜியில் வாழும் 8 லட்சம் மக்களில் 44 சதவீதம்பேர் இந்தியர்கள். அவர்கள் பொருளாதார நிலையில் மேம்பட்டவர்களாக இருக்கிறார்கள்.

நான் இரண்டு நாட்கள் சிட்னிக்குச் சுற்றுப்பயணம் செல்ல இருக்கிறேன். அப்போது ஆஸ்திரேலியா ராணுவ செகரட்டரி ஜான் மோரியுடன் என்ன நடவடிககைஎடுப்பது என்பது குறித்துப் பேசுவேன் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+