தமிழகத்தில் இன்று
மணந்தால் பாலமுருகன் ... இல்லையேல் மரண தேவன்
மதுரை:
காதலனை மணம் முடிப்பதற்காக மண்ணெண்ணெய் டின்னைக் காட்டி மிரட்டி காதலனை மணந்தார்மதுரையைச் சேரந்த பெண் ஒருவர்.
தேவகோட்டை அருகே பழைய சருகனி சாலையில் வசித்து வந்தார் பாலமுருகன். 22 வயதாகும்இவருக்கும், நடராஜபுரத்தைச் சேர்ந்த மாலா என்ற 19 வயது பெண்ணுக்கும் காதல்.
மாலா வசிக்கும் வழியாக பாலமுருகன் செல்வது வழக்கம். மாலாவைக் கண்டதும் காதல்வயப்பட்டார் பாலமுருகன். இருவர் கண்களும் கண்ணோடு கண் நோக்க இதயங்கள் காதல் வயப்பட்டன.
இருவரும் வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் திருமணத்திற்கு தடை போடப்பட்டது.இருந்தும், இவர்கள் அடிக்கடி தனியே சந்தித்து பேசி வந்தனர். இதையறிந்த ஊர் மக்கள் காதல்தொடர்ந்தால் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து விடுவோம் என்று எச்சரித்தனர்.
காதலுக்கு முன் ஊர்க் கட்டுப்பாடுகள் நிற்குமா?. நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாகஅவர்களது காதல் வெற்றிகரமாக இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்தது. ஆனால் காதலுக்கானஎதிர்ப்பும் உடன் வளர்ந்தது.
இந்த நிலையில், மாலா தனது தாயார் ஜெயலட்சுமியுடன் பாலமுருகன் வீட்டுக்குச் சென்றார். பாலமுருகனின்தாயார் சுலோச்சனாவிடம் நானும் உங்கள் மகன் பாலமுருகனும் இரண்டு வருடமாககாதலக்கிறோம். எஙகள் இருவருக்கும் திருமணம் செய்து வையுங்கள் என்றார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பாலமுருகனின் தாயார் பாலமுருகனை திருமணம் செய்து கொள்ளவரதட்சணை தரவேண்டும் என்றார். மாலா பாலமுருகணைப் பார்க்க அவர் தன் தாய் சொல்வதைஆமோதிப்பது போல் அமைதியாக இருந்தார்.
கோபமடைந்த மாலா தன் வீட்டிற்குச் சென்று மண்ணெண்ணெய் டின்னை எடுத்துக் கொண்டு பாலமுருகன்வீட்டிற்கு வந்தார். பின்னர் பாலமுருகன் தாயாரைப் பார்த்து, எங்கள் திருமணத்தை நடத்திவைக்காவிட்டால் இங்கேயே தீக்குளித்து விடுவேன் என மிரட்டினார்.
இதனால் ஊர் பெரியவர்கள் கூடினர். பஞ்சாயத்து நடந்தது. இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதெனமுடிவானது. ஊர் கோயிலில் திருமணம் செய்து வைத்தனர்.
மண்ண்ெணையைக் காட்டி காதலனை மணந்த கதைதான் இப்போது சருகணியின் ஹாட் டாபிக்.