தமிழகத்தில் இன்று
சுத்தத்தை வலியுறுத்தி நடைப் பயணம் மேற்கொண்ட ஸ்டாலின்
சென்னை:
சென்னை நகர மக்களிடம் தூய்மை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகமேயர் ஸ்டாலின் நடைப் பயணம் மேற்கொண்டார்.
சென்னை நகரில் தூாய்மைப் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன.சிங்கப்பூர் நிறுவன உதவியுடன் குப்பைகள் அகற்றும பணியை சென்னை மாநகராட்சிமேற்கொண்டுள்ளது. ஆனாலும், இதற்கு பொதுமக்கள் போதிய ஒத்துழைப்புஅளிப்பதில்லை.
இந்நிலையில் சென்னை மாநகரை தூய்மை நகரமாக மாற்ற வேண்டும் என்றால்பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்பதை வலியுறுத்தியும், தூய்மை பற்றியவிழிப்புணர்வை அவர்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையிலும் சென்னையில்சனிக்கிழமை சென்னை மாநகராட்சி மேயர் ஸ்டாலின் நடைப் பயணம்மேற்கொணடார்.
தி.நகர் பனகல் பூங்கா வரை அவர் நடைப்பயணம் மேற்கொண்டார். அவருடன்மாநகராட்சியின் தூய்மைத் திட்ட அதிகாரிகள், அதற்காக பயன்படுத்தப்படும்வாகனங்கள், பள்ளி மாணவ மாணவிகள் அணி வகுத்து வந்தனர்.
காலை 7 மணி முதல் 9.15 மணி வரை இந்த நடைப் பயண நிகழ்ச்சி நடைபெற்றது.இது போன்ற ஒவ்வொரு கோட்டத்திலும் நடத்தப் போவதாக மேயர் ஸ்டாலின்தெரிவித்தார்.