தமிழகத்தில் இன்று
அரசியல் சட்டத் திருத்தத்தை 8 தமிழ் கட்சிகள் நிராகரித்தன
கொழும்பு:
இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக அதிபர் சந்திரிகா குமாரதுங்கா தயாரித்துள்ள அரசியல் சட்டத் திருத்தத்தை ஏற்க முடியாது என எட்டு தமிழ்க்திட்டவட்டமாக கூறியுள்ளன.
கொழும்பில், ஞாயிற்றுக்கிழமை டெலோ, ஈபிஆர்எல்எஃப், பிளாட், ஜனநாயகத் தொண்டர் காங்கிரஸ், சிலோன் தேசிய தொண்டர் கட்சி, மக்கள்முன்னணிக் கட்சி, சிலோன் தொண்டர் காங்கிரஸ், சிலோன் தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் சார்பில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கை:
இலங்கையில் தொடர்ந்து 17 ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. இப்போரில் இதுவரை 70, 000 பேர் இறந்துள்ளனர். இன்னும் போர் நின்றபாடில்லை.இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் அரசியல் சட்ட திருத்தம் கொண்டுவர அதிபர் சந்திரிகா முயல்கிறார். இதற்கு நாங்கள் ஆதரவளிக்க மாட்டோம்.
அவர் கொண்டுவரவுள்ள அரசியல் சட்டதிருத்தத்தை நாங்கள் நிராகரிக்கிறோம். இதனால் அங்கு வாழும் தமிழர்களுக்கு எந்த சலுகைகளும்கிடைக்கப்போவதில்லை.
போரை உடனடியாக நிறுத்த அதிபர் சந்திரிகா முயல வேண்டும். அவரும், எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும், மூன்றாவது நாட்டை சமரசம் செய்துவைக்க அழைக்க வேண்டும். விடுதலைப்புலிகளுடனும் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி போரை முடிவுக்குக் கொண்டு வர முயல வேண்டும் என்றுகூறியுள்ளது.
அறிக்கையில் எட்டு கட்சிகளின் தலைவர்களும் கையெழுத்திட்டுள்ளனர். இன்னொரு முக்கிய கட்சியான தமிழர் ஐக்கிய விடுதலைக் கட்சி இந்தஅறிக்கையில் கையெழுத்திடவில்லை.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications