தமிழகத்தில் இன்று
"பின் லேடனைக் கடத்த அமெரிக்க கமாண்டோக்கள் திட்டம்"
இஸ்லாமாபாத்:
சர்வதேச பயங்கரவாதியும், ஆப்கானிஸ்தானில் வசிக்கும் பெரிய கோடீஸ்வரருமான ஒசாமா பின் லேடனைக் கடத்த அமெரிக்க கமாண்டோ படையினர்திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமிய அடிப்படைவாத குழுத் தலைவர் கூறியுள்ளார்.
ஜமியத் உலேமா-இ-இஸ்லாம் என்ற அமைப்பின் தலைவர் பஸல் ரஹ்மான் கூறியதாவது:
ஒசாமா பின் லேடனைக் கடத்த அமெரிக்க கமாண்டோ படையினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக அவரைச் சுற்றி வளைக்க அமெரிக்க கமாண்டோபடையினர் ஆப்கானிஸ்தானுக்கு வரத் தொடங்கியுள்ளனர்.
இது தொடர்பான தகவல்கள் எனக்குக் கிடைத்துள்ளன. ஆளும் தாலிபான் அரசுக்கு எதிரான படையினரின் வசம் உள்ள தலைநகர் காபூலுக்கு அருகேஉள்ள பகுதியில் அமெரிக்க கமாண்டோ படையினர் வந்து இறங்கியுள்ளனர்.
பின் லேடன் மறைவிடத்தை நோக்கி முன்னேறி வரும் அவர்கள் விரைவில் பின் லேடனுக்கு எதிரான தாக்குதலை மேற்கொள்வார்கள் என்றுதெரிகிறது. அப்படி அவர்கள் தாக்குதல் மேற்கொண்டால் அது தவறாகும் என்றார் பஸல் ரஹ்மான்.
ஐ.ஏ.என்.எஸ்.