தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

பிரபாகரன் கட் அவுட் வைத்து நிதி திரட்டும் கனடா தமிழர்கள்

டொரான்டோ:

இலங்கையில் தனி ஈழம் கேட்டு போராடி வரும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக, கனடா தமிழர்கள் சாலைகளில் பிரபாகரன் கட் அவுட் வைத்து,கலை நிகழ்ச்சிகள் நடத்தி நிதி திரட்டுகின்றனர்.

இலங்கையில் நடந்து வரும் சண்டையில் இலங்கை ராணுவத்துக்கு எதிராக எந்த ஒரு சிறிய வெற்றியைப் புலிகள் பெற்றாலும் கனடா தமிழர்கள் தங்கள்நாட்டில் அந்த வெற்றியை பிரமாண்டமாக கொண்டாடுகின்றனர்.

இத்தகைய வெற்றிக் கொண்டாட்டமும், நிதி திரட்டு விழாவும் கனடாவின் முக்கிய நகரமான டொரான்டோவில் உள்ள குயினஸ் பார்க்கில் சமீபத்தில்நடைபெற்றன. மிகப் பெரிய அளவில் பிரபாகரனின் கட் அவுட்டுகள் வைக்கப்பட்டிருந்தன.

விடுதலைப் புலிகளுக்கான நிதி திரட்டும் விழா துவங்கிய சில மணி நேரங்களிலேயே கோடிக்கணக்கான ரூபாய் திரண்டுவிடுகிறது என்பதும், ஆண்டுதோறும்ரூ.100 கோடி அளவுக்கு விடுதலைப் புலிகளுக்கு கனடா தமிழர்கள் நிதி திரட்டித் தருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஒரு தீவிரவாத அமைப்பாக இந்தியாவும், அமெரிக்காவும் அறிவித்துத், தடை விதித்துள்ளன. ஆனால், பிரிட்டன்,ஜெர்மனி, கனடா போன்ற நாடுகளில் அந்த இயக்கத்துக்குத் தடை விதிக்கப்படவில்லை.

இதையடுத்து விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு அந்த நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் தங்கள் ஆதரவை வெளிப்படையாகத் தெரிவிப்பதுடன், அந்தஇக்கத்துக்கு அதிக அளவில் நிதி திரட்டியும் வழங்குகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+