கீதையின் பாதையில்...
பாட்னா விமான விபத்தில் 50 பேர் பலி
பாட்னா:
பாட்னாவிலிருந்து டெல்லி கிளம்பிய அல்லயன்ஸ் ஏர்லைன்ஸ் விமானம், பாட்னா விமான நிலையம் அருகே நொறுங்கி விழுந்து, வெடித்துச் சிதறியதில் 50பேர் இறந்தனர்.
திங்கள்கிழமை காலை 7.30 மணிக்கு இந்த விபத்து நடந்தது. கல்கத்தாவிலிருந்து பாட்னா வந்த இந்த விமானம், அங்கிருந்து லக்னோ வழியாகடெல்லி செல்லவிருந்தது.
பாட்னா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே சித்கோரா பாலம் அருகே விழுந்து நொறுங்கியது. விமானம் விழுந்து நொறுங்கியஇடத்திலிருந்து பெரும் புகை மூட்டம் கிளம்பியது.
மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். விபத்தில் குறைந்தது 50 பேர் இறந்திருப்பார்கள் என்று தெரிகிறது. இருப்பினும் இதுகுறித்துஉறுதியாகத் தெரியவில்லை. விமானத்தில், 57 பயணிகளும், ஆறு பணியாளர்களும் இருந்ததாகக் கூறப்படுகிறது.
யு.என்.ஐ.