கீதையின் பாதையில்...
ஈவ் டீசிங்கில் இறந்த மாணவி குடும்பத்துக்கு நிதியுதவி
சேலம்:
சேலத்தில் ஈவ்டீசிங் கொடுமைக்குப் பலியான மாணவி அகிலாவின் குடும்பத்துக்கு ரூ 25 ஆயிரம் நிதியுதவிவழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
சேலம் மாவட்டத்தில் மேல்நிலைப்பள்ளி மாணவி அகிலா ஈவ்டீசிங் கொடுமைக்குப் பலியானது எனக்கு மிகவும்வேதனையாக உள்ளது. அவருக்கும், அவரது குடும்பத்துக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத்தெரிவித்துக்கொள்கிறேன்.
அம்மாணவியின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவிவழங்குமாறு உத்தரவிட்டுள்ளேன்.
இந்த உதவித்தொகை உடனடியாக அகிலாவின் குடும்பத்தினருக்குக் கிடைக்க ஏற்பாடு செய்யும்படி அம்மாவட்டக்கலெக்டருக்கும் உத்தரவிட்டுள்ளேன் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் உப்பிலியாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அகிலா. இவரின் அப்பா அரசுப் போக்குவரத்துக்கழகபேருந்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார். மூன்று வாலிபர்கள் கேலி செய்ததால், மண்ணெண்ணெய்ஊற்றித் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டு இறந்தார்.
இதுதொடர்பாக ஏற்கனவே யூசுப், ஜாபர், மற்றும் நூர்முகமது ஆகியோரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications