தமிழகத்தில் இன்று
நவம்பர் முதல் வாரத்தில் நாடாளுமன்றத் தேர்தல்
கொழும்பு:
இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் நவம்பர் முதல் வாரத்தில் நடக்கும் என்று அதிபர் சந்திரிகா குமாரதுங்கா தெரிவித்தார்.
கொழும்பில் அவர் நிருபர்களிடம் இதுகுறித்துக் கூறுகையில்,
இலங்கையில் ஆகஸ்ட் 24 ம் தேதி நள்ளிரவு நாடாளுமன்றம் கலைக்கப்படும். நவம்பர் முதல் வாரத்தில் பொதுத் தேர்தல் நடைபெறும். அரசு நிர்வாகஅதிகாரிகளுடன் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினேன்.
புதிய நாடாளுமன்றத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படும். தேர்தலுக்கு முன்பே இதற்கான அரசியல் சட்டத் திருத்தம் கொண்டுவரப்படும். பொதுத் தேர்தலுக்கு முன் தமிழர்களின் குறைகள் கேட்டறியப்படும். நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
இலங்கையில் நடந்து வரும் இனப்பிரச்சனையினால் ஏராளமானோர் கொல்லப்பட்டு வருகிறார்கள். போரினால் தேர்தல் நடத்துவதில் காலதாமதம்எதுவும் இருக்காது என்றார்.
முன்னதாக ஆளும் கூட்டணியான மக்கள் கூட்டணியின் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகளுடன் அதிபர் சந்திரிகா ஆலோசனை நடத்தினார். 11 மணி நேரம்இந்தக் கூட்டம் நடந்தது. தேர்தல் பிரசாரத்திற்குத் தயாராகுமாறு அவர்களிடம் சந்திரிகா கூறினார்.
யு.என்.ஐ.