For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

பாட்னா விமான விபத்தின் கோரங்கள்

டெல்லி:

பாட்னா விமான விபத்தில், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஏழு பயணிகள் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகின்றனர்.

பி.ருங்க்தா, பி.போபண்ணா, ஆர்.ரானா, ஆர்.ரஞ்சன், கே.ராஜ்கரியா மற்றும் ஒரு பெண் உள்பட 7 பேர் காயமடைந்து மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் பாட்னாவைச் சேர்ந்தவர்கள்.

விமானம் வெடித்துச் சிதறி, கீழே விழுந்தபிறகு, இவர்கள் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டனர். ஆபத்தான நிலையில் அனைவரும்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களது நிலை குறித்து தெரிவிக்கப்படவில்லை. விமானத்தின் கதவுக்கு அருகே இவர்கள் அமர்ந்திருக்கலாம்என்று தெரிகிறது.

விமான விபத்து நடந்த இடம் முழுவதும் இறந்த பயணிகளின் உடல்கள் சிதறிக் கிடந்தன. பல உடல்கள் உருக்குலைந்து கிடந்தன.

விபத்து நடந்த இடத்திற்கு அருகேயுள்ள பல குடிசை வீடுகள் தீக்கிரையாகி விட்டன. அங்கு வசித்து வந்தவர்கள் நிலை குறித்துத் தெரியவில்லை. கிரேன்கள்மற்றும் தீயணைப்புப் படை வீரர்கள் மூலம் இங்கு சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. விபத்து குறித்து அறிய உதவும் கருப்புப் பெட்டிஇன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

விமான நிலைய ரன்வேயிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலேயே விபத்து நடந்துள்ளது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X