தமிழகத்தில் இன்று
இருந்த ஒரு மானும் போச்சு!
புவனேஸ்வர்:
ஒரிஸ்ஸா மாநிலம் போலாங்கீர் மாவட்டத்தில் உள்ள கந்தமர்தான் விலங்கியல் பூங்காவில் இருந்த ஒரே மான் கொல்லப்பட்டுள்ளது.
கந்தமர்தான் விலங்கியல் பூங்காவில் ஒரே ஒரு ஆண் மான் மட்டுமே உண்டு. தற்போது அந்தப் மானின் இறந்த உடல் கைப்பற்றப்பட்டுள்ளது. அதன்எலும்புகளும், சிதைந்த சதைகளும்தான் கிடைத்துள்ளன. இந்தப் மான் கொல்லப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது.
ஐந்து பேர் கொண்ட ஒரு கும்பல் அம்பாசடர் காரில் பூங்காவிற்குள் வந்துள்ளதாகவும், மானை அவர்கள் வலை போட்டுப் பிடித்துச் சென்றதாகவும்,வியாழக்கிழமை இரவு வனத்துறை அதிகாரிகளுக்கு ஒரு நபர் போனில் தெரிவித்துள்ளார். இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் பூங்கா முழுவதும்மானைத் தேடினர். ஆனால் அது கிடைக்கவில்லை.
இந்த நிலையில், மானின் இறந்த உடல் திங்கள்கிழமை கைப்பற்றப்பட்டது. போனில் மர்ம மனிதர் கூறிய ஐந்து பேர்தான் மானைக் கொன்றிருக்கவேண்டும் என்று வனத்துறை அதிகாரிகள் கருதுகின்றனர். மரக்கட்டையால் மான் அடிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. கொன்ற பிறகு கறியைசமைத்துச் சாப்பிட்டுள்ளனர்.
கந்தமர்தான் விலங்கியல் பூங்கா அமைந்துள்ள ஹரிசங்கர் வனப் பகுதியில், 46 ஆண் மான்களும், 57 பெண் மான்களும் உள்ளன. கந்தமர்தான், இரண்டுஆண்டுகளுக்கு முன்புதான் விலங்கியல் பூங்காவாக அறிவிக்கப்பட்டது. இங்கு ஒரே ஒரு ஆண் மான்தான் இருந்து வந்தது. அதுவும் இப்போது கொல்லப்பட்டுவிட்டது.
ஒரிசாவில் தற்போது மொத்தம் 1500 மான்கள், பல்வேறு விலங்கியல் பூங்காக்களில் உள்ளன. சமீபத்தில் நந்தகனான் விலங்கியல் பூங்காவில் 12புலிகள் இறந்தது பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications