தமிழகத்தில் இன்று
சென்னை அரசு மருத்துவமனைக்கு ஐ.எஸ்.ஓ. 9002 சான்றிதழ்
சென்னை:
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் குடலியல் அறுவைச் சிகிச்சைப் பிரிவுக்கு, ஐ.எஸ்.ஓ. 9002 சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே இந்த சான்றிதழைப் பெறும் முதலாவது அரசு மருத்துவமனை ஸ்டான்லி என்பது குறிப்பிடத்தக்கது. 13 வருடங்களுக்கு முன்பு குடலியல்அறுவைச் சிகிச்சைப் பிரிவு துவக்கப்பட்டது. தரமான சேவைக்காக இந்த சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் சுகாதாரத் துறை செயலாளர் திரிபாதி, ஐ.எஸ்.ஓ. 2002 சான்றிதழை, முதல்வர் கருணாநிதியிடம் காண்பித்தார். நிகழ்ச்சியின்போது, காதாரஅமைச்சர் ஆர்க்காட் வீராசாமி, மருத்துவமனை டீன் முனிரத்தினம், துறைத் தலைவர் ஆர்.சுரேந்திரன் ஆகியோரும் இருந்தனர்.
நாட்டிலேயே மிகச் சிறந்த குடலியல் அறுவைச் சிகிச்சைப் பிரிவாக ஸ்டான்லி மருத்துவமனை விளங்குகிறது. கல்லீரல், குடல் அறுவைச் சிகிச்சையில் அதிநவீன அறுவைச் சிகிச்சை இங்கு மேற்கொள்ளப்படுகிறது. 24 மணி நேரமும் இந்தப் பிரிவு இயங்குவது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications