தமிழகத்தில் இன்று
போராட்டம் நடத்த என்ஜீனியரிங் கல்லூரி ஆசிரியர்கள் முடிவு
சென்னை:
தமிழக அரசு என்ஜினியரிங் கல்லூரி ஆசிரியர்களுக்கு ஜூலை 24 க்குள், 5 வது சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படிசம்பள விகிதம் மாற்றப்படாவிட்டால் மாணவர் சேர்க்கைக்கான ஆலோசனைக் கூட்டம் புறக்கணிக்கப்படும் என்றுஅண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
சங்க செயலாளர் கலாநிதி இதுகுறித்து திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ்நாட்டில் 5 வதுஊதியக் கமிஷன் பரிந்துரைப்படி அண்ணா பல்கலைக் கழகம் உள்பட, அரசு என்ஜினியரிங் கல்லூரிஆசிரியர்களுக்கு சம்பள விகிதம் மாற்றியமைக்கப்பட வேண்டும்.
இதுதொடர்பாக கடந்த ஏப்ரல் 18 ம் தேதி மாநில கல்வி உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் கலாநிதி, அரசு என்ஜினியரிங் கல்லூரிகளில் சம்பள விகிதம் ஜூன் 30தேதிக்குள் மாற்றியமைக்கப்பட்டு விடும் என்றார். ஆனால் அரசு இந்த விஷயத்தில் காலம் தாழ்த்தி வருகிறது. 5வது ஊதிய விகிதப்படி சம்பள விகிதத்தை மாற்றியமைக்கக் கோரி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.துணைவேந்தர் கலாநிதி கேட்டுக் கொண்டதற்கிணங்க ஜூலை 24-ம் தேதி வரை போராட்டம்ஒத்திவைக்கப்படுகிறது.
ஜூலை 24 ம் தேதிக்குள் மாநில அரசு இதுகுறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் என்ஜினியரிங் கல்லூரிமாணவர்கள் ஆலோசனைக் கூட்டத்தையும், பகுதிநேர என்ஜினியரிங் வகுப்பையும் புறக்கணிப்போம் என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications